நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சளி.. இருமல்.. பறந்தே போகும்! இப்படி ஒரு மிளகு ரசம் வச்சி சாப்பிடுங்க

மிளகு ரசம் தென்னிந்திய மக்களின் விருப்பமான ஒன்றாகும்.
தமிழகத்தில் எந்த விருந்தும் ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. எல்லா விருந்துகளிலும் தவறாமல் இடம் பெறும் ரசம் தமிழகத்தில் மட்டுமில்லை தென்னிந்திய மக்களின் பொதுவான உணவு ஆகும். அதிலும் மிளகு ரசம் தென்னிந்திய மக்களின் விருப்பமான ஒன்றாகும்.

மிளகு ரசம் செய்முறை:

2 சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ள வேண்டும். 
பின்னர் அவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 
பின்னர், ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு பண்ண வேண்டும். 
நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

இதற்கு அடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை கலந்த தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 
இதையடுத்து, புளிக் கரைசலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து தீயைக் குறித்து வானலியை மூடிவைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். அதே நேரத்தில் ரசத்தை அதிக நேரம் கொதிக்கவிடவும் கூடாது.

மற்றொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில், கடுகு, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை, கொதிக்கும் ரசத்தில் கலக்க வேண்டும். பின்னர், ரசத்தை அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, சாப்பிட பரிமாறலாம். இன்னும் கொஞ்சம் மிளகு காரம் தூக்கலாக இருக்க வேண்டும் என்றால் சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!