நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி


இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வீரியத்துடன் வேகமாக பரவி வருவது, முதலீட்டாளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

பங்குகளை விற்று தள்ளியதால், பிற்பகலில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1406 புள்ளிகள் சரிந்து 45 ஆயிரத்து 554 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 432 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 13 ஆயிரத்து 328ல் நிலை கொண்டது. வங்கி, நிதி, ஊடக துறை பங்குகளை கடும் சரிவை சந்தித்தன.

கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து வந்ததால், தொடர்ந்து புதிய உச்சத்தில் இருந்து வந்த நிலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!