நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாகனங்களில் பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

நான்கு சக்கர வாகனங்களுக்கு ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த முறைக்கு மாறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் தற்போது ஃபாஸ்டேக் நடைமுறையில் இருந்தாலும், 75 முதல் 80 சதவீதம் மட்டுமே மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரொக்கமாக கட்டணம் செலுத்தி வாகனங்கள் செல்ல ஒரு வரிசை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதற்கும் முற்றுப்புள்ளி வைத்து 100 சதவீதம் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது.

தற்போது இந்த அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஃபாஸ்டேக் வரிசையில் சென்று ரொக்கமாக செலுத்த முயற்சி செய்தால் இரு மடங்காக கட்டணம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!