நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Siberia-வின் கொடூரக் குளிரில் உறைந்துபோன noodles, viral ஆன post!!

 


ஒவ்வொரு ஆண்டும், சைபீரியா பிராந்தியத்தில் மக்கள் அனுபவிக்கும் கடுமையான குளிர் உலக அளவில் தலைப்புச் செய்தியாகிறது. இந்த ஆண்டும் அது மாறவில்லை.

வட இந்தியாவில் வழக்கம் போல் குளிர் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. உலகின் பல நாடுகளில் குளிர் மிக அதிகமாக உள்ளது. மக்கள் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் தங்களை சூடாக வைத்துக்கொள்ள பலவித முயற்சிகளை மெற்கொண்டு வருகிறார்கள்.

ரஷ்யாவின் (Russia) சைபீரியாவில் பல இடங்களில் வெப்பநிலை இப்போது -45 செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இது நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு குளிராகும்.

ஒவ்வொரு ஆண்டும், சைபீரியா (Siberia) பிராந்தியத்தில் மக்கள் அனுபவிக்கும் கடுமையான குளிர் உலக அளவில் தலைப்புச் செய்தியாகிறது. இந்த ஆண்டும் அது மாறவில்லை.

எலும்பை குத்தும் குளிரின் (Cold) அட்டூழியத்தை சித்தரிக்கும் ஒரு படத்தை சைபீரிய நபர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அது மக்களை திகைக்க வைத்துள்ளது. ஒரு ட்விட்டர் பயனர், தனது நூடுல்ஸ் மற்றும் முட்டைகள் -45 செல்ஷியசில் காற்றில் உறைந்திருப்பதை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். சைபீரியாவில் உள்ள தனது சொந்த ஊரான நோவோடிபிர்ஸ்கில் அவர் இதை எடுத்துள்ளார்.


காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த படத்தை பகிர்ந்த ட்விட்டர் பயனர், @olegsvn, “இன்று எனது சொந்த ஊரான சைபீரியாவின் நோவோடிபிர்ஸ்கில் -45 செல்ஷியஸ் (-49 எஃப்)" என்று எழுதினார்.

இந்த படம் சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகிவிட்டது. இதைக் கண்டு பல நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், பலர் இதற்கு வேடிக்கையான பின்னூட்டங்களை அளித்து வருகின்றனர். இந்த படத்தை பகிர்ந்த ஒலெக்கால் தனது உணவை சாப்பிட முடியுமா இல்லையா என்பது பலரது கேள்வியாக இருந்தது.

மேற்கு மற்றும் மத்திய சைபீரியாவில் ஆண்டு இறுதிக்குள் -50 செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும் என்று ரஷ்யாவின் நீர்நிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வழக்கமான டிசம்பர் குளிரை விட 20 டிகிரி குறைவாக இருக்கும்.

ஹைட்ரோமீட்டாலஜிகல் சென்டரின் விஞ்ஞான இயக்குனர் ரோமன் வில்ஃபாண்டின் கூற்றுப்படி, தீவிர குளிர் என்பது காலநிலை மாற்றத்தின் விளைவாகும். "புவி வெப்பமடைதல் என்பது அதிக வெப்பநிலை மட்டுமல்ல, இதில் குளிர் அதிகரிப்பதும் இருக்கும். மாறுபாட்டின் அளவீடுகள் பெரிய வீச்சில் இருக்கும்” என்று அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!