நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் மீன் சூப்.

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகளில் மீன் சூப்பும் ஒன்று. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.

                             மீன் சூப்


தேவையான பொருட்கள் :

முள் நீக்கிய மீன் - 4 துண்டு

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 5 பல்

சாம்பார் வெங்காயம் - 6 (நறுக்கவும்)

பட்டை - சிறிதளவு

எண்ணெய் - தேவைக்கு

ஏலக்காய் - 3

வெங்காயத்தாள், பிரியாணி இலை - சிறிதளவு

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை:

சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காய், பட்டை ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும்.

கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகள், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.

மீன் துண்டுகள் நன்கு வெந்ததும் பிரியாணி இலை, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

சுவையான மீன் சூப் தயார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!