நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலுக்கு குளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்

மங்குஸ்தான் பழத்தில் சத்து மிக அதிகம். இந்த ஜூஸ் நமது தோலை பாதுகாக்கும். நம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்

மங்குஸ்தான் - 1/4 கப் (சதை மட்டும்),

கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்,  

தேன் - தேவைக்கேற்ப,

குளிர்ந்த நீர் - 100 மில்லி.


செய்முறை

மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்கவும்.

மிக்சியில் மங்குஸ்தானையும், கற்றாழையையும், தேனையும் சேர்த்து நன்கு அரைத்து பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!