நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகளை குணமாக்கும் டீ

இந்த டீயை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும்.
தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி விதை - 100 கிராம்,

ஏலக்காய் - 2,

பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்,

பால் - அரை டம்ளர்.


செய்முறை :

தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடித்து கொள்ளவும்.

பாலை கொதிக்க வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்து வரும் போது ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி பால், பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகவும்.

இந்த டீயை பால் ஊற்றாமல் குடித்தால் மிகவும் நல்லது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!