நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Watch Viral Video: ‘குடிமகளுக்கு’ நேர்ந்த வேதனை; ஏறிய போதை நொடியில் இறங்கிய சோதனை

 வீடியோவில், ஒரு பெண் தனது சில நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கிறார். வீடியோவின் ஆரம்பத்தில், எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது, ஆனால்  காட்சி மாறுகின்றன. 


நண்பர்கள் ஒன்றக சேர்ந்த மது அருந்துவதில் தவறேதும் இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், போதை தலைகேறி என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்வது, பல,சமயங்களில் ஆபத்தாகி விடுகிறது.


அது தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பெண் தனது சில நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கிறார். வீடியோவின் ஆரம்பத்தில், எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது, ஆனால்  காட்சி மாறுகின்றன. 


இந்த வீடியோவை டிக்டோக் பயனர் @ autumncathey6  என்பவர் எடுத்துள்ளார். வீடியோவை எடுத்துள்ள இந்த பயனரும் அவரது சில நண்பர்களும் மது பானங்கள் குடித்த பின் தங்களது நடவடிக்கையில் என்ன மாற்றங்கள் என்பதை விளக்க முயன்றனர். வீடியோவில், மது பானங்களை எடுத்துக் கொண்ட பிறகு, அவர்கள் தாங்கள் எந்த அளவிற்கு குடித்துள்ளோம்,  எங்களின் நிலை என்ன என்பதைக் கூறுவதைக் காணலாம். இந்த வீடியோவை ட்விட்டரில் @fernvndoo என்ற பயனர் 'OH MY GOD' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

WATCH VIDEO 

எல்லோரும் குடித்துவிட்டு பாரில்  இருந்து வெளியேறும்போது, ​​டிக் டாக் பயனர் தனது தோழர்களில் ஒருவரின் தோளில் சவாரி செய்கிறார், இருவரும் குடிபோதையில் இருக்கிறார்கள். எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த நேரத்தில், நடந்த விபரீதமான செயல் ஒன்றினால், ஏறிய போதை நொடியில் இறங்கியது. வீடியோவின் கடைசி பகுதி, நண்பரின் தோளில் சவாரி செய்யும் பெண் காரில் அமர்ந்திருப்பதையும், அவளது முன் பற்கள் பலவற்றை காணலாம். சிறுமியின் வாயிலிருந்து ரத்தம் வருவதையும் காணலாம்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


ALSO READ :  ”வாலை” நறுக்கினால் மட்டுமே வாழலாம்; கர்ப்பம் தரிக்கவும் கடுமையான கட்டுப்பாடு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!