நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும்.? வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்....

 World Last Selfie | உலகின் கடைசி மனிதன் யார், உலகம் அழியப் போகும் நேரத்தில் எப்படி இருக்கும், உலகின் கடைசி நொடிகள், உலகம் எப்படி எல்லாம் அழியும் வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி பல்வேறு வேடிக்கையான ஆய்வுகளும், தீவிரமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI பலவிதமான எதிர்காலம் பற்றிய பலவிதமான நுண்ணறிவை வழங்கி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் செல்ஃபி மீது மிகப்பெரிய மோகம் இருந்தது. தற்பொழுது தொழில்நுட்பம் பல்வேறு வகையில் முன்னேற்றமடைந்த நிலையில் செல்ஃபி மோகம் குறைந்திருந்தாலும், பாரம்பரிய புகைப்படங்களை விட, செல்ஃபிக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும் என்ற ஒரு யோசனை தோன்றியதற்கு ஒரு AI அதிர்ச்சியூட்டக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

DALL-E என்று ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உலகின் கடைசி செல்ஃபியில் மனிதர்கள் எப்படி இருப்பார்கள், உலகம் எப்படி இருக்கும் என்பதை கணித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. டிக்டாக்கில் ஷேர் செய்யப்பட்ட இந்தப் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. மனிதர்கள் போலவே காட்சியளிக்கும் ஒரு சில உருவங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது மற்றும் மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஒரு வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட புகைப்படப் பின்னணியோடு, மிகவும் ஒல்லியான உருவத்துடன் ஒரு முகம் காட்டப்பட்டுள்ளது. புகை மூட்டமாக இருக்கும் பின்னணியில் ஜோம்பி போன்ற ஒரு உருவம் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

OpenAI என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு, GTP-3 மாடல் என்ற அடிப்படையில் இத்தகைய அச்சுறுத்தக்கூடிய புகைப்படங்களை DALL-E AI System உருவாக்கியுள்ளது. GTP-3 என்பது ஆழமாக கற்றுக்கொள்ளுதல் என்ற அம்சம் மூலம் மனிதர்களை போலவே உரையாடவும், கதைகள் சொல்லவும், கவிதைகள் எழுதவும், வாசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மொழி சார்ந்த AI டெக்னாலஜி. DALL-E என்பது GTP-3 இன் 12 பில்லியன் பராமீட்டர் ஆகும். இது ஆழமாக கற்றுக்கொள்ளுதல் என்ற செயல்முறையை பயன்படுத்துவதன் மூலம் உள்ளிடப்பட்டிருக்கும் சொற்களின் அடிப்படையில் புகைப்படங்களை உருவாக்குகிறது.


இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பிடம் பூமியில் இருக்கும் மனிதர்களின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான பதிலாகத்தான் மிகவும் நெருக்கடியான மற்றும் ஆபத்தான சூழலில் தீவிரமாக பாதிக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை AI வெளியிட்டது. ஏற்கனவே உள்ளிடப்பட்டிருக்கும் விவரங்கள் மற்றும் அதனுடைய புரோகிராம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ரேண்டமாகத்தான் ஏஐ செயல்படுகிறது. எனவே, AI வெளியிட்ட அச்சுறுத்தக்கூடிய புகைப்படங்கள் சரியானதாக இருக்கக்கூடும் என்பதற்கு எந்த சான்றும் கிடையாது. இருப்பினும் இந்தப் புகைப்படங்களை பார்த்து அனைவரும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள்.

இதை பார்த்தவுடன் பயந்து விட்டேன், இனிமேல் எப்படி தூங்க முடியும், உலகம் இதை நோக்கித்தான் செல்கிறது, இனி இப்படித்தான் இருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!