Posts

Showing posts from September, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சத்து நிறைந்த நட்ஸ் பாயாசம்.....

Image
 பாயாசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. இன்று நட்ஸ் பாயாசம் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் :   பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 20 கிராம்  திராட்சை மற்றும் பேரீச்சை - 20 கிராம்  பால் - 1/2 லிட்டர்  சேமியா - 1/4 கப்  ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை  சர்க்கரை - 1/4 கப்  நெய் - தேவையான அளவு  செய்முறை :  பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  நட்ஸ் அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் பால் வைத்து நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து வேக விட வேண்டும்.  சேமியாக வெந்ததும் சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும்.  பின் அதில் வறுத்த பருப்பு வகைகள், திராட்சை, பேரீச்சை சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார். ALSO READ :  குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு பாதாம் ஷிரோ .....

தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்கும் ஆட்டுப்பால் .....

Image
 ஆட்டுப்பாலை நேரடியாக சருமத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்கும். சருமத்தின் இளமையை பாதுகாக்கும். சருமத்தின் அழகையும், மிருதுவான தன்மையையும், பொலிவையும் பராமரிப்பதற்கு உதவும் இயற்கையான பொருள் ஆட்டுப்பால். சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும் ஆட்டுப்பாலை முகத்தில் பூசி வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.  சத்துக்கள்:  ஆட்டுப்பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், ஒமேகா-6, வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.  சருமத்தை மிருதுவாக்கும்:  சென்சிடிவ் மற்றும் வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் எளிதாக பொலிவை இழக்கும். இவர்களுக்கு ஆட்டுப்பால் சிறந்த தீர்வாக அமையும். இது தோல் அழற்சி, அரிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும். இதில் இருக்கும், லாக்டிக் அமிலம் சருமத்துக்குள் எளிதாக ஊடுருவி தோலை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்றும்.  வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீராக்கும். சருமத்தின் அடுக்குகள் கொழுப்பு மற்றும் செலினியம் மூலக்கூறுகளைக் கொண்டவை. இவற்றில் குறைபாடு ஏற்பட்டால், சருமம் விரைவில் வறட்சி அடையும். ஆட்டுப்பாலில் இருக்கும் கொழுப்பு மற்றும் செலி

தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள் .....

Image
 கைப்பேசியை பலரும், தூங்கப் போகும் நேரத்தில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான நேரத்தில் தூங்குவது முக்கியமானது. தூங்கச் செல்வதற்கு முன்பு கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துதல் நேரத்தை வீணாக்குவதோடு கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். கைப்பேசியை பலரும், தூங்கப் போகும் நேரத்தில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடைமுறைபடுத்துவதற்கான சிறந்த வழி. நீங்கள் எவ்வளவு நேரம் கைப்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். எந்த செயலியை அதிகம் பயன்படுத்துகிறீர்கள், எத்தனை முறை உங்கள் கைப்பேசியை திறக்கிறீர்கள் என்பதை அறிய, கைப்பேசியின் செட்டிங்ஸ்-சில் டிஜிட்டல் வெல்பீயிங்-ஐ கிளிக் செய்து துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் தேவைக்கு அதிகமாக நீங்கள் பயன்படுத்தும் செய

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு பாதாம் ஷிரோ .....

Image
 இது வட இந்தியாவில் அதிகமாக சுவைக்கப்படும் இனிப்பு ஆகும். இதில் வைட்டமின் ஈ, புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:  பாதாம் - 100 கிராம்  காய்ச்சிய பால் - ½ லிட்டர்  சர்க்கரை - 6 தேக்கரண்டி  ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி  குங்குமப்பூ - 1 கிராம்  நெய் - தேவைக்கேற்ப  செய்முறை:  பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.  வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும்.  பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.  கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும். இப்போது பாதாம் ஷிரோ தயார்.  அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூத் தூவி பரிமாறவும். ALSO READ :  பூண்டு நீர் - ஆரோக்கிய நன்மைகள்: தினமும் குடித்தால் க

அடிக்கடி ஏதாவது சாப்பிட தோணுதா..? கட்டுப்படுத்த இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!

Image
 Food | சரியான நேரத்தில் சாப்பிடுவது முதல் புரோட்டீன் நிறைந்த உணவுகள், நிதானமாக சாப்பிடுவது போன்ற பல்வேறு விஷயங்களை உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே அடிக்கடி பசி உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்காது என்கின்றனர் மருத்துவர்கள். பசி என்பது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான உணர்வு. அதே சமயம் அடிக்கடி ஒருவருக்கு பசி ஏற்பட்டால் உங்களது உடல்நிலையில் ஏதோ பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று அர்த்தம். எனவே கவனமுடன் இருப்பது அவசியமான ஒன்று. உடலில் நார்ச்சத்துள்ள உணவுகள் பற்றாக்குறை, உடலுக்குத் தேவையான சத்துக்களுடன் கூடிய உணவுகள் மற்றும் உடலுக்குத்தேவையான நீர்ச்சத்துக்கள் பற்றாக்குறை போன்றவற்றாலும் நமக்கு சாப்பிடக்கூடிய உணர்வு அடிக்கடி ஏற்படும். மேலும் உடலில் ஏற்படும் லெப்டின் மற்றும் கிரெலின் ஹார்மோன் மாற்றங்கள், உடலில் திடீரென சர்க்கரை அளவு குறைதல், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களில் உடலில் பசியை தூண்டும் கார்டிசோல் என்கிற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது. எனவே உடலுக்கு பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்நேரங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். இதோ

பிரட் ஓரம் இருக்கும் பகுதியை ஏன் சாப்பிடமாட்றீங்க...? உங்களுக்காக உருவாக்கப்பட்ட புது பிரட்!!

Image
 புதிய ரொட்டி குறைந்த வெப்பநிலையில் மெதுவாக சுடப்படுகிறது, இது மேலோடு பழுப்பு நிறமாக மாறாமல் ஈரப்பதமாகவும் மென்மையாகவும் இருக்கும். உணவை வீணாக்குவது என்பது உலகம் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சனை. உலக அரங்கில் பசி பஞ்சம் என்று ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் உணவை சாதாரணமாக வீணடிக்கின்றனர். விரயத்தைக் குறைப்பதற்கான புதுமையான வழிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றி வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஜப்பானில் ஒரு உணவு நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். பொதுவாக நாம் சாப்பிடும் பிரட் வகைகள் பேக் செய்யப்படும்போது முறுகி வெளிப்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளே இருக்கும் மிருதுவான பகுதி இனிப்பாகவும் சுற்றி உள்ளது கொஞ்சம் சுவை மாசுபட்டு இருக்கும். ஹோட்டல்களில் சுவை மாறுபாடு ஏற்படும் என்பதற்காக சுற்றி உள்ள பழுப்பு பகுதியை வெட்டி குப்பையில் போட்டுவிடுவர். அவை உண்ணக்கூடிய பாகங்களாக இருந்தாலும் அது வீணடிக்கப்படுகிறது. இப்படி போடும் பிரட் ஓரங்கள் மட்டும் பல ஆயிரம் கிலோ உணவு வீணாவதற்கு வழி செய்கின்றன. இப்படி ஓரங்களை வெட்டி உணவை வீணடிக்காமல் இருக்க ஒரு புதிய பிரட் வகையை உருவாக்கியுள்ளனர். ஷோகுபன் என

உலகின் சிறந்த விமான நிறுவனங்கள்.. 7-வது ஆண்டாக மாஸ் காட்டும் கத்தார் ஏர்வேஸ்....

Image
 உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான ஸ்கை டிரக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7வது ஆண்டாக தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கத்தார் நாட்டு அரசு அளித்து வரும் கத்தார் ஏர்வேஸ், கொரோனா காலத்திலும் தனது சேவையை தொடர்ந்து வந்தது. கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தப்போதும், கத்தார் ஏர்வேஸ், 30 இடங்களுக்கு அன்றாடம் விமான சேவையை அளித்தது. இரண்டாவது இடத்தை சிங்கப்பூர் நாட்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூன்றாவது இடத்தையும், ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்த ஹாங்காங்கின், கேத்தே பசிபிக், ஏராள

WhatsApp புதிய வசதி; அடிக்கடி Video Call செய்பவர்களுக்கு ஜாலி....

Image
 Whatsapp Call Link Generator: வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரையிலான குழுக்களுக்கான வீடியோ அழைப்பு அம்சத்தையும் நிறுவனம் சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார். இந்த செய்தி உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வாட்ஸ்அப் புதிய அம்சம். வாட்ஸ்அப் புதிய அம்சம்:  செய்தி மற்றும் அழைப்பு தளமான வாட்ஸ்அப், வீடியோ மற்றும் கால் அழைப்புகளில் சேர அதன் செயலி மூலம் 'லிங்க்' அனுப்பத் தொடங்கும். இந்த தகவலை வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி (CEO) மார்க் ஜூக்கர்பெர்க் திங்கள்கிழமை தெரிவித்தார். அதன்படி வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரையிலான குரூப் வீடியோ கால் செய்யும் வசதியையும் நிறுவனம் சோதிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 32 பேர் வீடியோ காலில் பேச முடியும் தற்போது வாட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பில் எட்டு பேர் மட்டுமே இணையலாம். ஆனால் இது தொடர்பாக சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் ஒரு பதிவில் ஜுக்கர்பெர்க் புதிய தகவலை வழங்கி உள்ளார். அதன்படி, இந்த வாரம் முதல் வாட்ஸ்அப்பில் 'கால் லிங்க்' அம்சத்தை வெளியிடுகிறோம், இதன் மூலம் நீங்கள்

நடந்தே எடையை குறைக்கலாம்!! ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?

Image
 Walking for Weight Loss: உடல் ஃபிட்டாக இருக்கவும், தொப்பை குறையவும் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அடிக்கடி எழுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம். நடைபயிற்சி உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் விறைப்பு பிரச்சனை இல்லாமல் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி: அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நாம் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் வாக்கிங், அதாவது நடைப்பயிற்சியும் ஒன்று. ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். தினமும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.  காலையிலும், இரவு உணவுக்குப் பிறகும் அடிக்கடி நடைபயிற்சி செய்வது நல்லது. ஆனால் உடல் ஃபிட்டாக இருக்கவும், தொப்பை குறையவும் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அடிக்கடி எழுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம். நடைபயி

உடல் எடையை குறைக்க தினமும் எத்தனை கலோரிகளை சாப்பிட வேண்டும்....

Image
 கலோரி உடலுக்கு அவசியம், ஆனால் அதன் அளவு அதிகமாக இருந்தால் உங்கள் எடை அதிகரிக்கும், எனவே அதன் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகும். எடை இழப்பு குறிப்புகள் தினமும் எத்தனை கலோரிகள் சாப்பிட வேண்டும் உடல் எடையை குறைக்க டிப்ஸ் உடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு தேவைப்படும் கலோரிகள்:  தினசரி உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை நீங்கள் குறைத்தால், உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும், நீங்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை கலோரிகளை உட்கொள்ள வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். உடல் பருமன் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் இது அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய், மூன்று நாள நோய் மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற பல நோய்களுக்கு மூல காரணம் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் தினசரி கலோரி உட்கொள்ளலைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். சராசரியாக, ஒரு நாளைக்கு எத்தனை கலோரிகள் உட்கொள்ள வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை கலோரிகள் சாப்பிட வேண்டும் என்பது உங்கள் வயது, பாலினம், உயரம், தற்போதைய எடை, செயல்பாட்டு நிலை மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது. உடல்

உடல் எடையை குறைக்கணுமா..? தயிரை வைத்து இந்த ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்க!

Image
 Weight Loss Tips | தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல நாட்களாக சாப்பிட்டு, சாப்பிட்டு கூட்டிய உடல் எடையை சில நாட்கள் உடற்பயிற்சி செய்தவுடனே குறைந்துவிட முடியாது. உடல் எடையை கூட்ட ஆன நாட்களை விட குறைக்க கூடுதலான கால அவகாசம் தேவைப்படும். தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைக்க விரும்பு நபர் என்றால், உணவில் சில மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும். எனவே தான் தயிரை வைத்து உடல் எடையை குறைக்க உதவும் 5 அற்புதமான உணவு வகைகளை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தயிரில் பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தேவையற்ற ஆரோக்கியமில்லா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க செய்கிறத

தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால்..

Image
 தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் சிறிது தூரம் நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் நலத்திற்கு அவசியமானது. நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்சமீபத்திய ஆய்வு முடிவின்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். முதுமையை தள்ளிப்போடும். திடீர் இறப்பு அபாயத்தை தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.  இது தொடர்பான ஆய்வு முடிவு ஜமா இன்டர்னல் மெடிசின் மற்றும் ஜமா நியூராலஜி இதழில் வெளியிடப்பட்டது. 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 78 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோய், டிமென்ஷியா உள்ளிட்ட எந்தவொரு நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள். அவர்கள் அனைவரும் தினமும் 10 ஆயிரம் அடி தூரம் நடக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  வேகமாக நடப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் போர்ஜா டெல் போசோ க்ரூஸ், ''ஒரு நாளைக்கு 3,800 அடிகள் நடப்பது கூட டிமென்ஷியா அபாயத்தை 25 சதவிகிதம் குறைக்க உதவும் என்பது ஆய்வில் நிர

பீட்ரூட்டும்.. உதடும்..!

Image
 பீட்ரூட் டில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்கக்கூடியது. உதட்டை அழகுபடுத்துவதற்கு லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்றில்லை. உதட்டின் நிறத்திற்கு ஏற்பவே பளிச் வண்ணத்தில் மிளிரும் பீட்ரூட்டும் சிறந்த உதட்டு அலங்கார பொருள்தான். இது சரும பராமரிப்பிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்தில் பொலிவு பெற வைப்பதோடு மென்மைத்தன்மையை தக்க வைக்கக்கூடியது.  சரும பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்கள் முகத்திற்கு விதவிதமான பேஸ் பேக்குகளை பயன்படுத்துவதுண்டு. முகத்திற்கு கொடுக்கும் முக் கியத்துவத்தை உதடுகளுக்கு கொடுக்க தவறிவிடுவார்கள். உதட்டு பராமரிப்புக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்று தெரியாமல் குழம்பவும் செய்வார்கள். அந்த குறையை பீட்ரூட் போக்கிவிடும். உதட்டுக்கு பிரகாசத்தையும், கூடுதல் அழகையும் பெற்று தரும்.  பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்கக்கூடியது. பீட்ரூட் இளம் சிவப்பு நிறத் தினால் ஆனது. அதே நிறத்தை உதடுகளுக்கும் கொடுக்கக்கூடியது. உதட்ட

நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ...

Image
  King Cobra Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. வீடியோவை பார்த்து மனம் பதபதைப்பதையும் தவிர்க்க முடியாது. சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.. வைரல் வீடியோ: நாகமணி!! இந்தப் பெயரை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம்.  நாகப்பாம்பின் தலையில் ரத்தினம் இருப்பதாகவும், அதற்கு 'நாகமணி' என்று பெயர் என்றும் நமது பெரியோர்கள் கூறியுள்ளனர். நாகமணி தொடர்பான பல கதைகளை புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. சிலர் நாகமணி இருப்பதாக நம்புகிறார்கள், பலரோ நாகமணி என்று ஒன்று இல்லை என்றே கூறுகிறார்கள்.  ஆனால், இந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும் வகையில்,  சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது. இது உண்மையில் நாகமணிதானா என்பது தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் இந்த

பூண்டு நீர் - ஆரோக்கிய நன்மைகள்: தினமும் குடித்தால் கிடைக்கும் ஏகப்பட பலன்கள்....

Image
 Garlic Water Health Benefits: பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது தினமும் ஒரு டம்ளர் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பல நோய்களைத் தடுக்கின்றன. பூண்டு நீர் - ஆரோக்கிய நன்மைகள்:   பூண்டு நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ள உணவுப்பொருளாகும். இதில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டு பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு டம்ளர் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். பூண்டின் பண்புகள் பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பல நோய்களைத் தடுக்கின்றன. பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் பி1, வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் இதில

உடல் எடையை குறைக்க எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

Image
 இரவில் ஒருவருக்கு போதுமான உறக்கம் இருந்தால் பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.   சரியாக தூங்காவிட்டால் உடல் எடை குறையாது என்று சில ஆய்வுகள் கூறுகிறது. லெப்டின் என்கிற ஹார்மோன் நாம் சாப்பிடும் அளவை கணித்து போதும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினசரி ஏதேனும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒவ்வொருவரது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு பழக்கவழக்கம், சுறுசுறுப்பான செயல்முறை போன்றவை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியமானது நல்ல உறக்கம்.  ஒருவருக்கு சரியான உறக்கம் இல்லையென்றால் அவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், அறிவாற்றல் குறைவு மற்றும் மனநல கோளாறுகள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று பல செய்திகளை நாம் கேட்டறிந்திருப்போம். ஆனால் தூக்கத்திற்கும், எடை குறைப்பிற்கும் சம்மந்தம் உள்ளது பற்றி நாம் பெரிதாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.  ஒருவரது மோசமான தூக்க பழக்கவழக்கம் ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்துவதோடு உடல் பருமனடைய செய்கிறது.  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக தூங்கா

நரை முடி கருமையாக வளர வெங்காய சாறு; எப்படி பயன்படுத்துவது?

Image
 வெங்காயம் உங்கள் தோல் மற்றும் முடி ஆகிய இரண்டும் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. முடி பராமரிப்பு குறிப்புகள் வெங்காய சாறு நன்மைகள் வெள்ளை முடிக்கு வெங்காய சாறு. வெள்ளை முடிக்கு வெங்காய சாறு நன்மைகள்:   வெங்காயம் நம் உணவின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. அதே சமயம், வெங்காயம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், வெங்காயம் உங்கள் சருமம் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் உள்ள பல பிரச்சனைகளை நீக்குகிறது. மறுபுறம், வெள்ளை முடியை இயற்கையாகவே கருமையாக்க வெங்காயம் உதவியாக இருக்கும். இளமையில் முடி உதிர்தல் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், வெங்காயம் உங்கள் பிரச்சனையை நீக்கும். ஆனால் வெங்காயச் சாற்றை முடியில் எப்படி தடவுவது என்று சிலர் கவலைப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, இந்த முறையை ட்ரை செய்து பாருங்கள். வெங்காய சாற்றை கூந்தலில் தடவுவதற்கான சரியான வழி - வெங்காய சாற்றை முடியில் தடவவும் இரவில் தூங்கும் முன், வெங்காயச் சாற்றை எண்ணெய் போல் தலையில் தடவவும். வெங்காயச் சாற்றை உச்சந்தலையில் இருந்து நுனி வர

செலவே இல்லாமல் ஒரே மாதத்தில் தொப்பை குறைய வேண்டுமா? இது உங்களுக்கான டிப்ஸ்...

Image
 பொதுவாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தொப்பை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவது உண்டு. இதனை கடினமான உடற்பயிற்சினாலும், கட்டுப்பாடான உணவு பழக்கங்களினாலும் கட்டுபடுத்த முடியும். அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தொப்பையை குறைக்ககூடிய நெல்லிக்காய் பானமொன்று எவ்வாறு தயாரிப்பது பற்றி தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் நெல்லிக்காய் - 3 கறிவேப்பிலை தூள் - 1 டீஸ்பூன் தேன் - இனிப்பு தேவையெனில் மாத்திரம் மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் சாறாக்கி எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கறிவேப்பிலை தூள், மிளகுத்தூள், உப்பு மற்றும் தேன் போன்றவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இந்த பானத்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் குடித்தால் தொண்டை கமறல் போன்று இருக்கும். இதனை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் தொப்பை குறைவதை பார்க்கலாம். ALSO READ :  தினமும் ஒரு கைப்பிடி உப்புக்கடலை சாப்பிடுங்க! இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்....

ஹோட்டல் சுவையில் நாவூறும் மொறு மொறுப்பான தோசை - செய்வது எப்படி?

Image
 இந்தியர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது இட்லி, தோசை தான். தோசையில் பல வகை உண்டு. ஆனால் பலருக்கும் வீட்டில் செய்யும் தோசை விட ஹோட்டல் ஸ்டைலில் சுடும் தோசையையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் சுவையான தோசையை எப்படி வீட்டிலிருந்தபடியே செய்வது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம் பச்சரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 100 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை விளக்கம் முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். நடு நடுவே தண்ணீர்ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும். அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும். இந்த சுவையான தோசை

முட்டையோட்டை கொண்டு இரண்டே நாட்களில் வெள்ளையாக முடியுமா? இது உங்களுக்கான டிப்ஸ்!

Image
 முட்டையோட்டினை கொண்டு எம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், முட்டையோட்டில் காணப்படும் மெல்லிய ஜெல் போன்ற பதார்த்தம் எம்மை பல மடங்கு அழகுபடுத்துகிறது. அந்த வகையில் முட்டையோடு எவ்வாறு அழகு சாதன பொருளாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் முட்டையோடு எலுமிச்சைச்சாறு முட்டை வெள்ளைக்கரு தேன் செய்முறை முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொட்டு பொடியாக்கிக் கொள்ளுங்கள். இந்த பொடியை காற்று உட்செல்லாத வகையில் பராமரிப்பது அவசியம். பின்பு முட்டையோட்டு பொடியுடன் முட்டையின் வெள்ளைகருவை சேர்த்து ஒரு கலவையாக கலந்து கொள்ளுங்கள். அது ஒரு புறம் இருக்க, மீண்டும் ஒரு கோப்பையில் முட்டையோட்டு பொடி, எலுமிச்சைசாறு, தேன் ஆகிய மூன்றையும் பசைபோல் கலந்துக்கொள்ளுங்கள். பாவணை முறை முகத்தை நன்கு குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளுங்கள். அதன் பின்பு முட்டையோட்டு பொடியுடன் முட்டையின் வெள்ளைச்கரு கலந்த கலவையை நன்கு முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனை 5 நமிடங்கள் நன்றாக இயற்கை காற்றில் உலர விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி செ

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு கேழ்வரகு தேங்காய் புட்டு- செய்வது எப்படி?

Image
 தமிழர்களின் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. கேழ்வரகின் பயன்கள் கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. இதில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும், உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கம்பின் பயன்கள் நார்ச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிரம்பியது கம்பு. இதில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. அதோடு, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கு உண்டு. வயிற்றில் இருந்து செரிமானமாகி குடலுக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனே பசிக்காது. என

தினமும் ஒரு கைப்பிடி உப்புக்கடலை சாப்பிடுங்க! இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்....

Image
 கருப்பு கொண்டைக்கடலையை எண்ணெய் சேர்க்காமல், உப்பு மட்டும் கலந்து வறுத்து எடுப்பதை தான் நாம் உப்புக்கடலை என்று சொல்லுவோம். இந்த உப்புக்கடலை மிகச்சிறந்த, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். இந்த வறுத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அந்தவகையில் என்னென்ன மாதிரியான நன்மைகளை நாம் பெற முடியும் என்று இங்கே தெரிந்து கொள்வோம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் வறுத்த கொண்டைக்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரங்களில் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் அடுத்த வேளை உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவைக் குறைக்க முடியும்.    கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே. அதனால் வறுத்த கொண்டைக்கடலை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஸநாக்ஸாக இருக்கும்.   வறுத்த கொண்டைக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்க உதவும்.   வறுத்த கொண்டைக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்களீசு ஆகியவை எலும்புகளை வலு

அக்குள் கருமையை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்....

Image
 Dark Underarms Cleaning Tips: எளிதாய் சுத்தம் செய்ய முடியாத பல காரணங்களால் அக்குள் கருப்பாக மாறுகிறது. அத்தகைய சில குறிப்புகளை இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், இதன் மூலம் நீங்கள் அக்குள் கருமையை போக்கலாம். அக்குள் கருமையை ஒளிரச் செய்வது எப்படி அக்குள் கருமையை போக்க சில வழிகள் அற்புதமான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள் அக்குள் கருமையை ஒளிரச் செய்வது எப்படி: கோடை காலத்தில் வியர்வையால் பெரும்பாலானோரின் அக்குள் கருப்பாக மாறும், இதை சுத்தம் செய்வது எனபது மிகவும் கடினமான பணியாகும். அக்குள் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அத்தகைய சில குறிப்புகளை இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், இதன் மூலம் நீங்கள் உங்களின் அக்குள் கருமையை போக்கி பளபளப்பாக மாற்றலாம். எலுமிச்சை கொண்டு அக்குளை சுத்தம் செய்யலாம் அக்குள்களை சுத்தம் செய்யவும், அக்குள் கருமையை குறைக்கவும் எலுமிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு எலுமிச்சையை தடிமனான துண்டுகளாக வெட்டி, அதை உங்கள் அக்குள்களில் சில நிமிடங்கள் தேய்க்கவும், பின்னர் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அக்குளை கழுவவும். பின்னர் காய வைத்தப் பின

இரவில் ஊறவைத்து காலையில் இதை சாப்பிடுங்கள்: நோய்கள் எல்லாம் ஓடியே போகும்!!

Image
 Sprouts Health Benefits: அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் நாம் சரிசெய்ய விரும்பினால், ஊறவைத்த சோயாபீன், பயறு போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.  முளை கட்டிய தானியங்களில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. முளை கட்டிய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் : ஊறவைத்த தானியங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தினமும் உட்கொண்டால், நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். முளைத்த பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானவை. அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் நாம் சரிசெய்ய விரும்பினால், ஊறவைத்த சோயாபீன், பயறு போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து வைட்டமின்களும் காணப்படுகின்றன.  பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!