தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
வைரஸ் பயமா? உங்கள் வீட்டில் காற்றை சுத்திகரிக்க இதை பண்ணுங்க....
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசர், ஏர் பியூரிஃபையர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதே நோக்கத்திற்காக எளிதில் கிடைக்கக்கூடிய ஆயுர்வேத பொருட்களைப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு தெரியுமா? உண்மையில் பியூரிஃபையர் இல்லாமலே உங்கள் அறையில் காற்றை சுத்தப்படுத்தலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஆயுர்வேத சக்தி மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. உங்களுக்கு தேவையானது புதிய வேப்ப இலைகள் மற்றும் சிறிது மஞ்சள். வீட்டில் இருக்கும்போது கைகளை சுத்தப்படுத்த திறம்பட பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு இது!
வேப்ப இலை மற்றும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது?
மஞ்சள் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது
வேப்ப இலைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும். இப்போது கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி நன்றாக கலக்கவும். காற்றை சுத்திகரிக்க இந்த கிண்ணத்தை உங்கள் அறையில் வைக்கலாம். உங்கள் கைகளை சுத்தப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.
வேப்ப இலைகள்’ தூசித் துகள்களைப் பிடிக்கும் மற்றும் வாயு மாசுகளை உறிஞ்சும் நேச்சுரல் ஏர் ஃபில்டர்ஸ் என்று அறியப்படுகிறது.
ஓரு பெரிய வேப்பமரம், அதிகபட்ச கார்பன் –டை-ஆக்ஸைடு நிலைப்படுத்தலுக்கு உதவுகிறது மற்றும் சல்ஃபர்- டை- ஆக்ஸைடு போன்ற மற்ற மாசு கூறுகளுக்கு எதிராக ஒரு கவசத்தை வழங்குகிறது. கூடுதலாக, இது பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மறுபுறம், மஞ்சளில் குர்குமினுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சுவாச மண்டலத்தை விடுவிக்கிறது மற்றும் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது.
உட்புற தாவரங்கள்
சில வீட்டு தாவரங்கள் உட்புற மாசுபாட்டை எதிர்த்துப் போராட உதவும்.
உட்புற தாவரங்கள் எனப்படும் இன்டோர் பிளாண்ட்ஸ் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை எடுத்து, அதை உயிர் கொடுக்கும் ஆக்ஸிஜனுடன் மாற்றுகின்றன. வீட்டிற்குள் எவ்வளவு தாவரங்கள் வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு வீட்டிற்குள் ஆக்ஸிஜனின் தரம் அதிகமாக இருக்கும். ஸ்னேக் பிளாண்ட், பீஸ் லில்லி, ஸ்பைடர் பிளாண்ட், ஃபிகஸ் ஆகியவை வீட்டில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் சில தாவரங்கள்.
அத்தியாவசிய எண்ணெய்
அத்தியாவசிய எண்ணெய்கள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. சரியான எண்ணெய்’ உண்மையில் காற்றின் தரத்தை உயர்த்தி நேர்மறையான முடிவுகளை அளிக்கும். பெப்பர்மிண்ட், டீ ட்ரீ, லாவெண்டர், யூகலிப்டஸ், ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் ஜெரனியம் போன்ற எண்ணெய்கள் அனைத்தும் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு எண்ணெய்கள். அவை அறைக்குள் பரவும் போது, சுற்றியுள்ள காற்றை சுத்தப்படுத்தி, அழகான நறுமணத்தையும் தருகின்றன.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
Comments
Post a Comment