Posts

Showing posts from 2020

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிர்ச்சி! கிரிக்கெட்டிலும் சாதி, பிராமணர்களுக்காக மட்டுமே ஏற்பாடு!

Image
  ஹைதராபாத்தில் ஒரு பிராமண கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் பிராமணர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்திய அரசியலமைப்பு எந்த விதமான பாகுபாட்டையும் அனுமதிக்காது. ஆயினும்கூட, பல ஆண்டுகளாக சமுதாயத்தில் சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காணப்படுகிறது, அது எப்போது முற்றிலுமாக முடிவடையும் என்று யூகிக்க முடியாது. இருப்பினும், மக்கள் விளையாட்டிலும் கூட இனவெறியைச் செய்யத் தொடங்குகிறார்கள் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், இதற்கு சமீபத்திய உதாரணம் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் காணப்பட்டது. ஹைதராபாத்தில், சிலர் 'பிராமண கிரிக்கெட் போட்டியை' (Brahmin Cricket tournament) ஏற்பாடு செய்தனர். இந்த போட்டியின் பெயரில் ஒரு பிராமணர் இருக்கிறார், இந்த போட்டியை பிராமணர்கள் மட்டுமே விளையாட முடியும். இந்த போட்டியில் வேறு எந்த சாதியினரும் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிகழ்வு டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பி.எஸ்.ஆர் மைதானத்தில் நடைபெற்றது. சமூக ஊடகங்களில் 'பிராமண கிரிக்கெட் போட்டி' என்ற பதிவு பெருகிய முறையில் வைரலாகி வருகிறது,

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு புரமோசன் கிடைக்கும்!

Image
  இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்........ இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்........   மேஷம்:  இன்று குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9   ரிஷபம்:  இன்று உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6   மிதுனம்:   இன்று பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந

புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை

Image
  வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை. வாடிகன்,  போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் நேற்று மாலை வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. இதே போன்று புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.  இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் ‘சியாட்டிகா’ என்ற பிரச்சினையால் முதுகு, கால் வலியால் கடந்த காலத்திலும் அவதியுற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காவிடினும், இன்று மதியம் அவர் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தில் தோன்றி புத்தாண்டு ஆசி வழங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ALSO READ :  Coronavirus ஜுலைக்குள் ஒழிய வேண்டுமா? இது மட்டும் நடந்தால் போதும்… LINK

2020-ம் ஆண்டு விடைபெற்றது; 2021-ம் ஆண்டு பிறந்தது - அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

Image
  2021-ம் ஆண்டு பிறந்ததையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். சென்னை, 2020-ம் ஆண்டு விடைபெற்றது. 2021-ம் ஆண்டு பிறந்தது. மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- கடந்த கால இருள் நீங்கும், கதிரொளி பரவும், மக்களின் கவலைகளை துடைத்திட வல்ல, காக்கும் கரங்களை கொண்ட நல்லாட்சி தமிழகத்தில் மலரும், தமிழ் மக்களுக்கு விடியல் தரும் வாழ்வு புலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன். இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்று பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும் தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:- பிறக்கும் 2021-ம் ஆண்டு மக்களின் வாழ்வாதாரம் வளமாகி, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‘ என்பதை நிலை நாட்டும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக மலரட்டும், பொலியட்டும். தமிழக

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: டெல்லியில் 2 நாள் இரவு நேர ஊரடங்கு அமல்

Image
  டெல்லியிலும் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, நாட்டில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களல் டெல்லியும் ஒன்று. டெல்லியில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா இந்தியாவிலும் கால் பதித்து உள்ளதால் மேலும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேரின் மாதிரி டெல்லி ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லியிலும் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக மக்கள் கூடுவதை தடுக்க  இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரையும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரையும் என 2 நாட்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு

மாநில தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள்; நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு அறிவிப்பு

Image
  நாடு முழுவதும் நாளை ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மாநில தலைநகரங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளன. உலகையே தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்துள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு ஓராண்டு காலமாக போராடிக்கொண்டிருக்கிறது.  இந்த போராட்டத்தினால் வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. உயிரிழப்பும் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் பெற்று வருகிற நல்ல பலன்களாகும்.  இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு நிரந்தரமாக விடை கொடுப்பதில் தடுப்பூசிக்குத்தான் முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் உள்நாட்டில் கோவேக்சின், ஜைகோவ்–டி போன்ற தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவை இறுதிக்கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி, இந்தியாவில் புனேயின் இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. புத்தாண்டில் இந்தியாவில் முன்னு

2020ம் ஆண்டிற்கு RIP போட்டு கொண்டாடும் இணையவாசிகள்...வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்

Image
  இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. அனைத்தும் உண்மையெனவும் நம்ப வேண்டாம். இந்த வருடத்திற்காண கடைசி நாளான இன்று இணையத்தில் பலரும் 2020 ம் அஞ்சலி செலுத்தியவாறும், வருட முடிவை கொண்டாடும் விதமாகவும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள் வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள் வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள் வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள் வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள் வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள் வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள் ALSO READ :  Happy new year 2021 : மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக்களை பகிருங்கள்! LINK

சுவையான சர்க்கரைப் பொங்கல்: இப்படி இனிப்புடன் புத்தாண்டை வரவேற்கலாமே!

Image
  இந்த 2021 புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம். இந்த புத்தாண்டை எல்லோரும் வீடுகளில் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் ரெசிப்பியுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளீர்களா? புத்தாண்டைத் தொடர்ந்து தைப் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கு முன்னோட்டாமாக புத்தாண்டு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க சுவையான சர்க்கரைப் பொங்கலுடன் கொண்டாடுங்கள். புத்தாண்டை இனிமையாக்க சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று ஐஇ தமிழ் செய்முறையுடன் அளிக்கிறது. சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்: 1. அரிசி – 1 கப் 2. பாசிப்பயறு – 1/4 கப் 3.பால் – 4 கப் 4.வெல்லம் – 1 கப் 5.முந்திரி – 3 தேக்கரண்டி 6.உலர்திராட்சை – 3 தேக்கரண்டி 7.ஏலக்காய் – 5 8.நெய் – 1/4 கப் 9.தேங்காய் – 1/2 கப் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை பொங்கல் செய்முறை: 1.முதலில் ஊறவைத்த அரிசியுடன், பாசிப் பயறு சேர்த்து பாலில் வேகவைக்க வேண்டும். 2. நெய், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிளற வேண்டும். 3.பின்னர், மற்றொரு வானலியில் நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை

கொத்தமல்லி சட்னி வாசனைக்கே அத்தனை தோசை சாப்பிடலாம்!

Image
  வீட்டுக்கு அருகே மளிகைக் கடையில் எப்போதும் கிடைக்கும் பொருளாக கொத்தமல்லி இலை இருக்கிறது. Dhosai chutney recipes, kothamali chutney :  கொத்தமல்லி இலை, உடல் நலத்திற்கு மிகவும் தேவையானது. குறிப்பாக ரத்த அழுத்தத்தை சீராக்குவது, பித்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு இது உகந்தது என்கிறார்கள். தவிர, கொத்தமல்லி இலை மூலமாக செய்யப்படும் ரசம், துவையல் ஆகியன டேஸ்டாகவும் இருக்கும். வீட்டுக்கு அருகே மளிகைக் கடையில் எப்போதும் கிடைக்கும் பொருளாக கொத்தமல்லி இலை இருக்கிறது. இந்தத் தழைகளை பயன்படுத்தி சட்னி தயார் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். VIDEO LINK CHUTNEY கொத்தமல்லி சட்னி தயாரிக்க தேவையான பொருட்கள்:  கொத்தமல்லி – 1 கட்டு,  வெங்காயம் – 2,  தக்காளி – 1,  மிளகாய் – 5,  தேங்காய் – 1/2 கப் (துருவியது),  உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,  கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,  பூண்டு – 2 பற்கள்,  இஞ்சி – 1 துண்டு,  புளி – சுண்டைக்காய் அளவு,  உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி சட்னி செய்முறை: ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி செய்முறை வருமாறு:  கொத்தமல்லி தழையில் இலைகளை ஆய்ந்து, நீரில் அல

Happy new year 2021 : மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக்களை பகிருங்கள்!

Image
  happy 2021 happy new year 2021 :  இந்த 2020ம் ஆண்டு நேற்றோடு நிறைவடைந்தது . இந்த 2021ம் ஆண்டு உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சி மற்றும் நன்மைகளை விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு  சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கின்றோம். அப்புறம், புத்தாண்டு அன்னைக்கு மட்டும் வாழ்த்து சொல்றதுக்குன்னு சில நண்பர்களை வாட்ஸ் அப்பில் வச்சிருப்பீங்க… வழக்கம் போல, ‘யாரு இவன்’ மோடில் அவர்கள் முழிக்கப் போவது கன்ஃபார்ம். அதுக்கு பதில், அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்கள் கூட பேசுங்க… முக்கியமா மது, சிகரெட் இல்லாமல் புத்தாண்டை வரவேற்க முயற்சி பண்ணுங்க… குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருங்க… நீங்க நல்லா இருந்தாதான் உங்க குடும்பம் நல்லா இருக்கும். ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் இதனை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். \ கீழே தரப்பட்டிருக்கும் சில வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் ஆப்பினை டவுன்லோட் செய்து உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள் Happy New Year 2021 wishes : புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த இனிய நாளில் உங்கள் மனம் கவர்ந்தவர் அனைவருக்கும் சிறப்பு

குட்பை 2020 : டுவிட்டரில் டிரெண்டிங்

Image
  சென்னை : 2020ம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். இதனால் இந்த ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தும், இந்த ஆண்டிற்கு குட்பை சொல்லியும், புத்தாண்டை வரவேற்றும் பலரும் கருத்து பதிவிடுவதால் டுவிட்டரில் #GoodBye2020, #lastdayof2020, #HappyNewYear2021 உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. ஒவ்வொரு ஆண்டும் கடந்து போய்க்கொண்டே தான் இருக்கிறது. இந்த 2020ம் ஆண்டு ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. காரணம் கொரோனா எனும் கொடிய நோய் உலகை நிலைகுலைய செய்துவிட்டது. லட்சக்கணக்கானோர் இந்த நோயால் இறந்து போயினர். கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டனர். வீட்டில் முடங்கிய சூழல் எழுந்தது. பொருளாதாரம் பாதித்து, வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த ஊர் செல்லாமல் நடந்து பல ஆயிரம் மைல்கள் தூரம் கடந்து சென்ற பல மக்களை பார்த்தோம். புயலும் ஒருபக்கம் மிரட்டி சென்றது. இந்தாண்டின் கடைசி நாள் இன்று(டிச., 31, 2020). இதனால் 2020க்கு மக்கள் குட்பை சொல்லியும், புத்தாண்டு நல்லதாக அமைய வேண்டும் என 2021-ஐ வரவேற்றும் மக்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டுவிட்டரில் இந்த விஷயம் தா

Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!

Image
  பாகிஸ்தானில் இந்து மத கோயில்கள் தாக்கப்படுவது இது முதன் முறையல்ல. சிந்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. ஒரு வெட்கக்கேடான சம்பவத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவிலை உள்ளூர் முஸ்லீம் மதகுருமார்கள் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் புதன்கிழமை தீ வைத்து அழித்தனர். ஊடக செய்தியின் படி, பாகிஸ்தானில் சுன்னி தியோபந்தி அரசியல் கட்சியான ஜாமியத் உலமா-இ இஸ்லாம்-பாஸ்ல் (JUI-F) ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. அங்கு பேச்சாளர்கள் உக்கிரமான உரைகளை நிகழ்த்தினர். அதன் பின்னர் இந்த கூட்டம் கோயிலில் புகுந்து, கோயிலுக்கு தீ வைத்து கோயிலை தரைமட்டமாக்கியது. JUI-F KP அமீர் மௌலானா அதௌர் ரஹ்மான், தங்கள் கட்சி கூட்டத்திற்கு பின்னரே கோயில் எரிக்கப்பட்டதால், அந்த சம்பவத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆகியுள்ளன. பலர் கோயிலின் சுவரையும் கூரையையும் உடைப்பதைக் காண முடிகிறது. அத

Shocking: இந்த வாரம் COVID Vaccine, அடுத்த வாரம் Corona Positive: US-ல் பரபரப்பு

Image
  COVID எதிர்ப்பு தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.  கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு செவிலியருக்கு, ஒரு முன்னணி மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவிட் எதிர்ப்பு மருந்தைப் பெற்ற எட்டு நாட்களுக்குப் பிறகு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேத்யூ டபிள்யூ என அடையாளம் காணப்பட்ட ஈ.ஆர் செவிலியர் டிசம்பர் 18 அன்று தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 'என் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். இன்னும் சிலரும் என்னுடன் காத்திருந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.” என்று மேத்யூ தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இருப்பினும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள், சான் டியாகோவில் இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் மேத்யுவுக்கு, ஒரு COVID-19 யூனிட்டில் பணிபுரிந்த பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போனது. ஊடக செய்தியின் படி, மேத்யு டிசம்பர் 26 ஆம் தேதி ஒரு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வைரஸ் (Coronavirus) பரிசோதனை செய்துகொண்டார்.

மாட்டிக்கொண்டது சீனா, வெளியானது கொரோனாவின் உண்மையான புள்ளிவிவரங்கள்!

Image
  வுஹான் நகரில் ஒரு செரோ கணக்கெடுப்பில் மக்கள் தொகையில் சுமார் 4.43 சதவீதம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.     கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை மறைத்து வைத்திருப்பதால் அமெரிக்கா உட்பட பல நாடுகளை சீனா தொடர்ந்து குறிவைத்து வருகிறது. ஆனால் இப்போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை விட அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சீனாவும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. சீனாவின் சுகாதாரத் துறை (Centre For Disease Control) ஏப்ரல் மாதத்தில் வுஹான் (Wuhan) நகரில் உள்ள செரோ கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது, மக்கள் தொகையில் சுமார் 4.43 சதவீதம் பேர் கொரோனா (Coronavirus) நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். செரோ கணக்கெடுப்பில் 4.43% மக்களில் கொரோனாவுக்கான ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டன. ALSO READ :   ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 நமக்கு உணர்த்தியுள்ளது: பிரதமர் மோடி LINK புள்ளிவிவரங்களின்படி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 10 மடங்கு அதிகம் சீனாவின் (China) வுஹான் நகரில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. அதாவது, செரோ கண

Coronavirus ஜுலைக்குள் ஒழிய வேண்டுமா? இது மட்டும் நடந்தால் போதும்…

Image
  தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை ஜூலை மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் என்றும் அவர் சொல்கிறார்… அவர் சொல்லும் நிபந்தனை என்ன தெரியுமா?    End of Coronavirus pandemic: தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை ஜூலை மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் என்றும் அவர் சொல்கிறார்… அவர் சொல்லும் நிபந்தனை என்ன தெரியுமா?    உலகில் கொரோனா (Coronavirus) நோயாளிகளின் எண்ணிக்கை எட்டரைக் கோடியைத் தாண்டியுள்ளது. 5 கோடியே 88 லட்சம் பேர் நோயில் இருந்து குணமாகியுள்ளனர். 18 லட்சத்து 10 ஆயிரத்திற்குக்ம் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் (Coronavirus) அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதோடு, அது புது அவதாரத்தையும் எடுத்துவிட்டது. இருப்பினும், விரைவில் கொரோனாவை உலகம் முழுவதிலுமிருந்து ஒழித்துக் கட்டிவிட முடியும். இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. தடுப்பூசி வந்துவிட்டது. பல நாடுகளில் தடுப்பு மருந்துக்

Google’s gift: பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கான App, இனி கண்களால் பேசலாம்!!

Image
 கூகிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேச்சு மற்றும் செயல்பாட்டு சிரமங்கள் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த செயலி மூலம் இந்த குறைபாடுள்ள பெரும்பாலான மக்களுக்கு Google நிறுவனம் ஒரு பெரிய உதவியை செய்துள்ளது. ‘Look to Speak’ என்ற இந்த செயலி, தொலைபேசியிலிருந்து சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை சத்தமாக உச்சரிக்க, பயனரின் கண்களை பயன்படுத்துகிறது. ‘Experiments with Google’ இயங்குதளத்தில் Look to Speak செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இது போன்ற ஒரு திட்டத்தில் பணிபுரிந்த ஒரு கூகிள் குழுவும், பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர் ரிச்சர்ட் கேவ் லுக்கும் இணைந்து உருவாக்கியுள்ளனர். “இது ஒரு நபருக்கு மட்டுமல்லாமல் ஒரு சமூகத்திற்கே உதவியை வழங்ககுவதற்கான ஒரு யோசனையுடன் தொடங்கியது. வடிவமைப்பு செயல்முறையின்போது, இது போன்ற ஒரு தகவல்தொடர்பு கருவியால் பயனடையக்கூடிய ஒரு சிறிய குழுவினரை நாங்கள் அணுகி அவர்களது அனுபவம் பற்றி தெரிந்துகொண்டோம்” என்று கேவ் ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறினார். Look to Speak

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!