நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

துபாயில் 148 கோடி ரூபாய் மதிப்பில் இந்து கோவில் கட்டப்பட உள்ளதாக தகவல்.

துபாயில் 148 கோடி ரூபாய் மதிப்பில் இந்து கோவில் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜேபிள் அலி பகுதியில் சுமார் 25ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் இந்த கோயில் உருவாக்கப்பட உள்ளது.கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்த கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 11 இந்து தெய்வங்களின் சிலைகள் பக்தர்களின் வழிபாட்டிற்காக உருவாக்கப்பட உள்ளன. அரேபிய பாணியில் கட்டப்பட்ட இந்த கோயில் அடுத்தாண்டு தீபாவளியையொட்டி திறக்கப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!