நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சத்தான உணவு, யோகா, மூச்சு பயிற்சி : நோய்களை விரட்ட இது போதும்!

 

‛‛ கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என, 3000 நோயாளிகளுக்கு மேல் வைத்தியம் பார்த்து இருக்கிறோம். எல்லோரும் முழுமையாக குணம் அஅடைந்து உள்ளனர், '' என்கிறார் கஸ்தூரிபா காந்தி மெமோரியல் சித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன்


கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறதே?
வைரஸ் கிருமிகளை பொறுத்தவரை, ஒரே மாதிரி தன்மையில் உருவாவதில்லை. பருவ கால மாற்றத்துக்கு ஏற்ப, அதன் தன்மை மாறுபடும். ஏற்கனவே வந்த சின்னம்மை, தட்டம்மை போன்றவையும் வைரஸ் நோய்தான்.வைரஸ் கிருமியை பொறுத்தவரை எப்படி உருவாகிறது, எப்படி மறைகிறது என்பது யாருக்கும் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து இருக்கலாம். நம் மரபு மருத்துவத்தில் மஞ்சள், வேப்பிலை பற்று, சூரிய ஒளியில் தண்ணீரை காய வைத்து குளிக்க வைப்பது போன்ற எளிய வைத்தியங்களை செய்துதான், அம்மையை குணப்படுத்தினர். இப்போதும் அம்மைக்கு தடுப்பு ஊசிதான் போடுகிறோம். தனியாக மருந்து இல்லை. கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அப்படித்தான்.

அப்படியானால் இந்த நோய் வராமல் தடுக்க என்னதான் வழி?
சித்த மருத்துவத்தில் ஆறு காலங்களை பற்றி சொல்கிறோம். அதில் குளிர்காலம், முன் பனிக்காலம் மற்றும் பின் பனிக்காலம் ஆகிய மூன்று காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிகள் வளர்ச்சி அடையும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இல்லாத போது, இந்த கிருமிகள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் பிரச்னை இல்லை. சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, இந்த நோயை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். சூரிய ஒளி உடலில் பட வேண்டும். யோகா மற்றும் மூச்சு பயிற்சி செய்து வந்தால், எந்த நோயும் நெருங்காது.


சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு நீங்கள் அளிக்கும் மருந்துகள், நோயை குணமாக்குவதா அல்லது எதிர்ப்பு சக்தி தருவதா?

உடலில் பல மில்லியன் செல்கள் உள்ளன. அதில் மைட்டோகாண்ட்ரியாவை, செல்களின் ஆற்றல் சாலை என்று சொல்வார்கள். இது நமது உடலில், 100 நாட்கள் வரை இருந்து செல்களை பாதுகாக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு, பிற மருந்துகளுடன் 'மிராக்கிள் டிரிங்க்' எனும் பானம் கொடுக்கிறோம். எலுமிச்சை, நார்த்தங்காய், நெல்லி போன்ற புளிப்பு சுவை உள்ள பொருட்களில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் மூலக்கூறுகள், இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த விட்டமின் சி மைட்டோகாண்டிரியாவை பாதுகாப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பானம், நோய்க்கு மருந்து என்று சொல்ல முடியாது. எல்லா நோயையும் எதிர்க்க கூடிய சக்தியை இது தரும். இந்த பானத்தை சாப்பிடும் போது, 80 சதவீதம் சத்து உடலில் சேர்கிறது. அதனால் நோயில் இருந்து விரைவாக குணமாக முடியும்.

கொரோனா நோயாளிகள் முக்கியமாக சளி பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு என்ன?

சளி, தலைவலிக்கு எளிய வைத்தியம் இருக்கிறது. சட்டியில் தண்ணீர் எடுத்து, நொச்சி இலை, மஞ்சள் துாள், கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், உடம்பில் உள்ள கெட்ட வியர்வை எல்லாம் வெளியேறி விடும். சளியும் இருக்காது, தலைவலியும் இருக்காது. தொண்டையில் வலி, கரகரப்பு இருந்தால் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தால் சரியாகி விடும். வயிறு பொருமல் என்றால், நான்கு மிளகு, ஒரு வெற்றிலை, இரண்டு உப்புக்கல் மென்று தின்றால் சரியாகி விடும். இதை வீட்டில் செய்து கொண்டால் நல்லதுதான்.


சித்த வைத்திய முறையில், கொரோனாவுக்கு வைத்தியம் பார்த்ததில், மக்களிடம் என்ன 'பீட்பேக்' கிடைத்துள்ளது?
எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை, கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என, 3000 நோயாளிகளுக்கு மேல் வைத்தியம் பார்த்து இருக்கிறோம். எல்லோரும் முழுமையாக குணம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்த பாதிப்பும் வரவில்லை.


ALSO READ :   Corona காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாத்தித்த இந்தியர் யார்?

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!