நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கையேந்திபவன் கார தோசை.. இதுல தான் அந்த ரகசியமே இருக்கு!

காலை மாலை டிபனுக்கு இதை ட்ரை பண்ணுங்க.
தோசை என்றாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசை என்றால்வேண்டாம் கேட்கவே வேணாம்.பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு … கார தோசை. கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1/2 கப் 

துவரம்பருப்பு – 1/4 கப் 

தேங்காய் – 1/2 முடி 

மிளகாய் – 4 

சீரகம் – 1/2 டீஸ்பூன் 

மிளகு – 10 

உப்பு – 1/2 டீஸ்பூன் 

பெருங்காயம் – சிறு துண்டு 

மல்லித்தழை, 

கறிவேப்பிலை – சிறிது 

செய்முறை:

முதலில் தோசை மாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.பின்னர் மிளகாயை தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறியபின் மிளகாய் மற்றும் பூண்டை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனையடுத்து முட்டையுடன் சிறிது உப்புத்தூள் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு தோசைக்கல்லை காய வைத்து, மாவை பரவலாக ஊற்றவும். தொடர்ந்து தோசை மீது முட்டையில் இருந்து சிறிதளவு பரவலாக ஊற்றி, முட்டை அரை பதமாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பூண்டு – மிளகாய் கலவையை சமமாக பரப்பி விடவும். சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும். அதன்பிறகு இரண்டு பக்கமும் வெந்ததும் மடித்து, எடுத்து வைக்கவும். பின்னர் எடுத்து பரிமாறவும்.

இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். காலை மாலை டிபனுக்கு இதை ட்ரை பண்ணுங்க.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!