நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எகிப்தில், மருத்துவர்களை கவுரவிக்கும் புதிய நாணயங்கள் வெளியீடு.

எகிப்தில், மருத்துவர்களை கவுரவிக்கும் புதிய நாணயங்கள் வெளியீடு.

எகிப்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் மருத்துவ குழுவினரை கவுரவிக்கும் விதமாக ஒன்றரை கோடி புதிய நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் புதிதாக அச்சிடப்பட்டுள்ள நாணயங்களில் “எகிப்தின் மருத்துவக் குழுக்கள்” என பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு பணியாற்றும் 6 லட்ச மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!