நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மேக்கப் இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் - என்ன நடந்தது?

 இங்கிலாந்தில் நடைபெற்ற அழகு போட்டியில் முதல் முறையாக ஒரு போட்டியாளர் மேக்அப் இல்லாமல் பங்கேற்றுள்ளார்.


அழகி போட்டிகள் என்று வரும்பொழுது நாம் தவிர்க்கவே முடியாதவை, போட்டியில் கலந்து கொண்டவர்களின் விதவிதமான ஆடை, அணிகலன்கள், அலங்காரங்கள் மற்றும் மேக்கப்! மேக்கப் என்பது அழகி போட்டிகள், திரைத்துறையில் இருப்பவர்கள் மாடல்கள் உள்ளிட்டவர்கள் மட்டும் தான் பயன்படுத்துவார்கள் என்பதெல்லாம் எப்பொழுதோ மாறிவிட்டது.

சர்வதேச அழகிப் போட்டி முதல் உள்நாட்டு போட்டிகள் வரை எல்லாவற்றிலுமே வெற்றி பெரும் அல்லது முதல் சில இடங்களில் வரும் அழகிகள் பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் பிரபலமாக மாறும். அழகு என்பது தோற்றம் மற்றும் மட்டுமே கிடையாது, உள்ளுக்குள் இருக்கும் அழகை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அழகி போட்டியில் பங்கேற்பவர்கள், வெற்றி பெற்ற அழகிகள் சொன்னாலும், மேக்கப் அணிவது, சருமம் மாசு மருவில்லாமல் இருப்பது, கூந்தல் அலையலையாய் பறப்பது, என்று அழகின் வரைமுறை எழுதப்படாத விதிமுறையாகவே இருந்து வந்துள்ளது.

அழகி போட்டிகள் என்று வரும் பொழுது தடையாக இருக்கும் வரைமுறையை உடைத்து புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு கிட்டத்தட்ட 94 ஆண்டுகள் ஆகியுள்ளன. இங்கிலாந்தில் நடைபெற்ற அழகு போட்டியில் முதல் முறையாக ஒரு போட்டியாளர் மேக்அப் இல்லாமல் பங்கேற்றுள்ளார். மேக்கப் இல்லாமல் அழகி போட்டியில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி தோன்றலாம்.

அவ்வாறு கேள்வி தோன்றும் அளவிற்கு அழகி போட்டி வரைமுறைகள் உலகம் முழுவதிலுமே உள்ளன! மிஸ் இங்கிலாந்து பட்டம் பெறக்கூடிய அழகிப்போட்டியில், போட்டியாளர்களில் ஒருவராக 20 வயதான மெலிசா ராஃப் என்ற பெண் பங்கேற்றுள்ளார். இவர் தெற்கு லண்டனில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவியாவார்.

மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற, இறுதி போட்டிக்குத் தகுதி பெறும் போட்டியாளர்கள் ச்டுரில் மெலிசாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் துளி கூட மேக்கப் பயன்படுத்தாமல் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் இயற்கையாகவே அழகு தான். எதற்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் என்றெல்லாம் பலரும் கூறுவார்கள்! அது உண்மைதான் என்பதை மெலிசா நிரூபித்திருக்கிறார். லண்டனில் அரசியல் இளங்கலை படிப்பைப் படித்து வரும் மெலிசா, அழகிப் போட்டிக்காக ஸ்டண்ட் அடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழலாம்.

ஆனால் மெலிசா மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவது பற்றி வித்தியாசமான கண்ணோட்டத்தைத்தான் கொண்டுள்ளார். எப்பொழுதாவது முக்கியமான நிகழ்வுகளின் போதும் மஸ்காரா லிப்ஸ்டிக் போன்றவற்றை அணியலாமே எதற்கு எப்பொழுதுமே பெண்கள் இவற்றையெல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும், அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா அல்லது எழுதப்படாத விதி இருக்கிறதா என்று பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு இயற்கையாக என்ன குறை என்பதை வலியுறுத்தும் வகையில் மிஸ் இங்கிலாந்து போட்டியில் மேக்அப் இல்லாமல் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றுள்ளார்.

இறுதிப் போட்டிக்குத் தேர்வான மெலிசா, ‘பெண்கள் சமூகத்தில் அவர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தால், எந்த வயதாக இருந்தாலும் மேக்கப் அணிந்து கொள்கிறார்கள். தங்களின் தோற்றம், சரும நிறம் ஆகியவற்றைப் பற்றி திருப்தி அடைந்தால், யாருமே மேக்கப் அணியத் தேவையில்லை.’ என்று கூறியவர், இளம் வயதில் மேக்கப் அணிந்ததாகவும், அதனால் மிகவும் அசௌகரியமாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இதுவரை எங்குமே நடக்காத அளவுக்கு, அழகிப் போட்டிகளின் கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளார் மெலிசா. மேலும், வெளிப்படையாக பேசியதும் பலரையும் ஈர்த்துள்ளது.


ALSO READ : 30 செ.மீ கேப்பில் காரை பார்க்கிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர் - அசத்தல் வீடியோ....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!