தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
30 செ.மீ கேப்பில் காரை பார்க்கிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர் - அசத்தல் வீடியோ....
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
Guinness World Record | லண்டனை சேர்ந்த ஸ்டண்ட் டிரைவரான பால் ஸ்விஃப்ட் சமீபத்தில் தனது வெள்ளை மினி கூப்பர் காரை கொண்டு பார்க்கிங் செய்து வினோத சாதனையை செய்துள்ளார்.
இன்றைய மக்கள் தொகை பெருக்கத்தால் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாத நிலையும் உருவாகி உள்ளது. எனவே ஒரு இறுக்கமான இடத்தில் வாகனம் நிறுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஆனால், இதை சரியாக செய்து விட்டால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு அதிகம் உள்ளது. ஆம், இப்படியொரு உலக சாதனையையும் ஒருவர் செய்து அசத்தியுள்ளார்.
லண்டனை சேர்ந்த ஒருவர் தான் இப்படியொரு வினோத சாதனையை செய்துள்ளார். ஸ்டண்ட் டிரைவரான பால் ஸ்விஃப்ட் சமீபத்தில் தனது வெள்ளை மினி கூப்பர் காரை கொண்டு பார்க்கிங் செய்து சாதனை செய்ய எண்ணியுள்ளார். இதனை 30 செ.மீ (11.8 இன்ச்) நீளமுள்ள சிறிய இடத்தில் வெற்றிகரமாக பார்க்கிங் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பொறித்துள்ளார். பிரிட்டிஷ் மோட்டார் ஷோவில் இந்த சாதனை முறியடிக்கும் வீடியோவில், பால் ஸ்விஃப்ட் இரண்டு கார்களுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளியில் ஒரு சறுக்கல் மூலம் இந்த பார்க்கிங்கை செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இரு கார்களுக்கு இடையே இருக்க கூடிய மிக குறுகிய இடத்தில் அவரது எலெக்ட்ரிக் காரை பார்க்கிங் செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் போது யாராக இருந்தாலும் ஒரு நொடி அதிர்ந்தே போவார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு துல்லியமான வகையில் அவர் தனது காரை பார்க்கிங் செய்துள்ளார். பிரிட்டிஷ் மோட்டார் ஷோவின் முதல் நாளில் ஸ்விஃப்ட் அதே சாதனையை 13.8 இன்ச் என்கிற 35 செ.மீ அளவில் இந்த சாதனையை செய்திருந்தார்.
பார்க்கிங் சாதனையை செய்து முடித்த பிறகு, அதே மாதிரியான பார்க்கிங் முறையை இரண்டு முறை மீண்டும் செய்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மேலும் ஸ்விஃப்ட் முதலில் 8 ஸ்பின்களுடன் சாதனை படைத்த பிறகு, நகரும் மோட்டார் பைக்கை 10 ஸ்பைன்களை சுற்றி மஞ்சள் ஃபோர்டு மஸ்டாங்கை சுழற்றினார். இந்த ஸ்டண்ட் நமது கண்களுக்கு விருந்தளிக்க கூடிய ஒன்றாக இருக்கும்.
2020 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அலஸ்டர் மொஃபாட் என்பவர் இது போன்ற ஒரு சாதனையை செய்துள்ளார். அவர் மிகவும் இறுக்கமான இடத்தில் இந்த பார்க்கிங் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை முறியடிக்கும் வீடியோவில், மொஃபாட் தனது காரை ஒரு சிறிய இடத்தில் நிறுத்தும்போது, அவரது காருக்கு முன்னும் பின்னும் உள்ளவற்றுக்கு இடையே 34 செ.மீ மட்டுமே இருந்திருந்தது. இந்த பார்க்கிங் முறையும் மிகவும் புதுமையானதாக உள்ளது. இந்த சாதனைக்கு பின்னர், அவர் தனது நண்பர்களான ஜான் மற்றும் ட்ரெவர் மொஃபாட் உடன் இணைந்து இறுக்கமான டிரிபிள் கார் பாரலல் பார்க் என்ற சாதனையை முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment