நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்திய வம்சாவளியினரை முக்கிய பொறுப்பில் இருந்து தூக்கிய ஜோ பைடன்..

கடந்த அதிபர் தேர்தலில் டெனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டு, பெரும் வெற்றியை பெற்றவர் 
ஜோ பிடன்.
சமீபத்தில், அதிபராக பதவியேற்றுக் கொண்ட இவர், தன் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிவதற்கு, இந்திய வம்சாவளியினர் சிலரை தேர்ந்தெடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருந்த சொனால் ஷா மற்றும் அமித் ஜானி என்ற இருவர், நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ், பிஜேபி ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் முந்தைய ஆட்சியின்போது, தற்போது நீக்கப்பட்டுள்ள இருவரும் முக்கிய பொறுப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!