நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஓடிடி, ஆன்லைன் செய்தி தளங்களுக்கு கடிவாளம் போடும் புதிய சட்டம்?

ஓடிடி, ஆன்லைன் செய்தி தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்கள் சுய ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் வகையில், விரிவான சட்டம் இயற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு, 20 கோடி பயனாளர்களுடன் ஓடிடி சந்தை விரிவடைந்து வருகிறது. வயது வந்தோருக்கான கன்டன்ட்டுகள், ஆபாசமான வசனங்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிடி தளங்களில் இடம்பெறுவதாக புகார்கள் உள்ளன.

இதேபோல பொய்ச்செய்திகள், தவறான வீடியோக்களும் பெருக்கெடுப்பதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையை மாற்றி, டிஜிட்டல் மீடியாக்கள் சுயஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் வகையிலும், டிஜிட்டல் மீடியாக்களின் சுதந்திரத்தை பாதிக்காமலும், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!