நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சருமத்தை ஹெல்தியாக வைத்துக்கொள்ள ’ஃபேஸ் சீரம்’ போதும்.. ஏன் தெரியுமா ?

 எல்லாவற்றையும் விட சருமத்தை ஹெல்தியாக வைத்துக்கொள்ள ஃபேஸ் சீரம் போதும் என்கின்றனர். ஏன் தெரியுமா..?


வயது செல்ல செல்ல முகத்தில் கோடுகள், தோல் சுருக்கங்கள், பொலிவிழந்த சருமம் போன்றவை தோன்றும். இருப்பினும் இவற்றையெல்லாம் சமாளித்து அழகு நிறைந்த முகத்த்தைப் பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால் அதை எல்லாவற்றையும் விட சருமத்தை ஹெல்தியாக வைத்துக்கொள்ள ஃபேஸ் சீரம் போதும் என்கின்றனர். ஏன் தெரியுமா..?

பளிச் முகம் :
 துக்காமின்மை, வேலை காரணங்களால் உங்கள் சருமம் பொலிவிழந்து காணப்பட்டால் சீரம் பயன்படுத்தும்போது செல்களுக்கு புத்துயிர் தந்து இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். இதனால் முகம் பளிச்சென மாறும்.


சருமத்துகள்கள் இறுகும் : 
சருமத்தில் உள்ள துகள்கள் பெரிதானால் அதனால் ஏகப்பட்ட சருமப் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதை தவிர்க்க சீரம் அந்த துகள்களை இறுகச் செய்து சீரான சருமத்தை அளிக்கும்.

மென்மையான சருமம் : 
சீரம் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் சருமம் மென்மையாக மாறுகிறது.

சுருக்கங்கள் களையும் :
 C0Q10, ரெட்டினால் மற்றும் காப்பர் போன்ற மூலக்கூறுகள் சீரத்தில் இருப்பதால் அவை உங்களை எப்போதும் இளமையாகவே காட்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும் : 
காலை மற்றும் இரவு தூங்கும் முன் அப்ளை செய்து கொள்ளலாம். வறண்ட சருமத்தினர் மாய்ஸ்சரைசர் போன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!