நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால் கோடீஸ்வரனான 16 வயது சிறுவன்!

 Myocarditis காரணமாகவே அவருக்கு தடுப்பூசிக்கு பிறகு இதய கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸின் பல வேரியன்ட்கள் பரவலாக மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பலரும் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவிட் -19 தடுப்பூசியை போட்டு கொள்ள மக்களை முன்வர செய்ய பல்வேறு நாடுகளின் அரசுகள் பல வழிகளைப் பயன்படுத்துகின்றன.

இதனிடையே சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ள ஒரு சிறுவன் கோடீஸ்வரனாகி உள்ளான். அமெரிக்காவின் வாஷிங்டன்னில் தடுப்பூசி போட்டு கொள்ளும் டீனேஜர்ஸ்களுக்கு விலையுயர்ந்த Apple AirPod வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதை போல ஏதாவது குறிப்பிட்ட சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்க கூடுமோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஷயம் அப்படி அல்ல. இருப்பினும், தடுப்பூசி போட்ட பிறகு எந்த நாட்டின் அரசாங்கமும் யாரையும் கோடீஸ்வரர்களாக மாற்றியிருக்காது. ஆனால் சிங்கப்பூர் அரசு மாற்றி இருக்கிறது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

சிங்கப்பூரில் வசிக்கும் 16 வயது டீனேஜ் சிறுவன் ஒருவன் தொற்றிலிருந்து தன்னை காத்து கொள்ளும் பொருட்டு அந்நாட்டில் புழக்கத்தில் உள்ள ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளான். தடுப்பூசியை எடுத்த 6-வது நாளில் அந்த சிறுவனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த சிறுவன் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் கார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல பாதிப்புகளில் இருந்து மீண்ட அந்த சிறுவன் திடீரென்று கோடீஸ்வரன் ஆவான் என்பதை அவனோ அல்லது அவனது குடும்பத்தினரோ சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தடுப்பூசி போட்டு கொண்டதன் விளைவாக சிறுவனுக்கு கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதி, சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அந்த சிறுவனுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. சிங்கப்பூரின் தடுப்பூசி நிதி உதவி திட்டத்தின் கீழ் (Vaccine Injury Financial Assistance Program), தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு ஒருவரின் உடல்நலன் திடீரென பாதிக்கப்பட்டு ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அந்த நபருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தான், தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு இதய கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பக்க விளைவு காரணமாக சிறுவனுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்ற சோதனையில், சிறுவன் Myocarditis என்ற பிரச்சனையை எதிர்கொண்டது தெரிய வந்தது.

Myocarditis காரணமாகவே அவருக்கு தடுப்பூசிக்கு பிறகு இதய கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியின் பக்க விளைவுகளை குறிப்பிட்ட சிறுவன் எதிர்கொண்டதாக கருத்தப்பட்டதால், சிங்கப்பூர் அரசு அச்சிறுவனுக்கு 2.25 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை வழங்கியது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.23 கோடி (ரூ.1,22,69,619). தற்போது குறிப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் சிகிச்சை தேவைப்படும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!