நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல்.. அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த தொழிலாளி

 ராமேஸ்வரத்திலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள் யாராவது இங்கு கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் குளத்தில் போட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சுமைதுாக்கும் தொழிலாளர் செல்வராஜ். இவரது தங்கை மகன், கல் ஒன்றை ஆனியால் செதுக்கி கொண்டு இருந்தான். அவனிடம் என்ன செய்கிறாய் என கேட்டார். அப்போது அந்த சிறுவன் கோவில் குளத்தில், கல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அந்த கல்லில் சிவலிங்கம் செய்கிறேன் என  தெரிவித்தார்.பின் அந்த கல்லை அவரது வீட்டு தண்ணீர் தொட்டியில் போட்டப்போது அது மூழ்காமல் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள்  தண்ணீரில் மிதக்கும் கல்லை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ராமாயணத்தில் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது என கேள்விப்பட்டுள்ளேன்.இந்த கல்லும் அதுபோன்ற அதிசய கல்லாக இருக்கும் என்பதால், காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

தண்ணீரில் மிதக்கும் கல் குறித்து, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் கூறியதாவது: இது பவளப்பாறை வகையை சார்ந்தது. இதன் எடை ஒன்றரை கிலோ இருக்கும். இவ்வகை பாறைகள் கடலில் மட்டுமே காணப்படும்.  மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.  அரிதாக காணப்படும் இவ்வகை பவளப்பாறைகளை ராமேஸ்வரத்திலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள் யாராவது இங்கு கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் குளத்தில் போட்டு இருக்கலாம் என அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!