நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காதலுக்கு கண்ணு மட்டுமா இல்ல, வயசும் இல்லை; 36 வயது வித்தியாசத்தில் மலர்ந்த காதல்!

 


81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தம்பதிகளாக வாழ்த்து வருவது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், 81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தம்பதிகளாக வாழ்த்து வருவது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலுக்கு கண் இல்லை என கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஜோடி காதலுக்கு வயதும் இல்லை. முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான பாட்டியுடன் சாட்டிங் செய்த இளைஞர் ஒருவர், அவரையே காதலித்து கை பிடித்துள்ளார். பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ் (81-வயது) (Iris Jones) மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த மஹமத் (36 வயது) (Mohamed Ahmed) என்ற வாலிபரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களுக்குள் நடந்த சாட்டிங்கிற்கு பின், நட்பை காதலாக புதுப்பித்துள்ளனர்.

கடந்த 2019 நவம்பர் மாதம், தனது காதலனை பார்க்க பிரிட்டனிலிருந்து எகிப்து பறந்து சென்றிருக்கிறார் ஐரிஸ். அவரை வரவேற்க ஏர்போர்ட்டில் காத்திருந்த மஹமத், முதன்முறை நேரில் சந்தித்த போதே, ஐரிஸை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டாராம். அதனை தொடர்ந்து தங்கள் காதலை ஒருவொருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்ட இந்த ஜோடி, தம்பதிகளாக வாழத் துவங்கிவிட்டனர்.


இதுகுறித்து மஹமத் கூறுகையில், ‘இப்படி ஒரு அழகான தேவதையை காதலியாக பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவன்’ என்றார். காதல் என்றால் வில்லன் இல்லாமலேயா..! இவர்கள் காதலுக்கு வில்லனாக வந்திருக்கிறார் ஐரிஸின் மகன். 54 வயது நிரம்பிய ஐரிஸ் மகன் ஸ்டீபன், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பை அசால்ட்டாக எதிர்கொண்ட ஐரிஸ், தனது காதலில் உறுதியாக நின்றிக்கிறார். இதனால் மகன் அவரிடமிருந்து பிரிந்து போக, குடும்பமே இரண்டாக உடைந்திருக்கிறது.

இதனிடையே கொரோனா பரவ, தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனுக்கு செல்ல மஹமத்துக்கும் விசா கிடைக்கவில்லை. மீண்டும் தனது காதலியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார் மஹமத். 


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!