நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் கடற்பாசியில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையை பார்வையிட்டு, கூடுதல் உற்பத்தி நிலையம் அமைபதற்கான திட்ட பணியினை மத்திய மீன் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், கடற்பாசி தொழிலில் ஈடுபடும் பெண்களின் மாத வருமானத்தை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என கூறினார்.
கடற்பாசி மூலம் இயற்கை உரம் தயாரிப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆண்டிற்கு 20 லட்சம் லிட்டர் இயற்கை உரம் உற்பத்தியை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

ரசாயன உரங்கள் மூலம் பஞ்சாப்பில் அதிகளவில் கோதுமை உற்பத்தி செய்யப்படுவதாக கூறிய கிரிராஜ் சிங், இதனால் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எனவே இயற்கை உரத்தை விவசாய நிலத்தில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!