தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
இந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்
- Get link
- X
- Other Apps
அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவியுங்கள் என டுவிட்டரில் #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் திடீரென டிரெண்ட் ஆனது.
சமூகவலைதளமான டுவிட்டரில் திடீரென ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும். பலர் அது ஏன், எதற்கு என்று கூட பார்ப்பது இல்லை, டிரெண்ட் செய்வார்கள். அதிலும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்ற கேட்கவே வேண்டாம். காட்டுத் தீ போல பரவி சமூகவலைதளத்தை ஆக்கிரமித்து கொள்ளும். அந்தவகையில் இப்போது #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது. இது எதற்காக என்று துல்லியமாக தெரியவில்லை. ஆனால் இந்துக்களின் ஒற்றுமைக்காகவும், அவர்களின் மனக்குமுறல்களாகவும் இந்த விஷயத்தை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவியுங்கள் என கூறி வருகின்றனர். காரணம் பல்வேறு மதங்களுக்கு வழிப்பாட்டு தலங்கள் உள்ளன. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் தான் அரசு கட்டுப்பாட்டிற்கு வருகிறது. மற்ற மதங்களுக்கு அது போன்று இல்லை என டுவிட்டர் வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்து கோயில்களில் வசூலாகும் தொகையில் பெரும் பணம் அரசு கஜானாவிற்கு செல்கிறது. ஆனால் மற்ற மத வழிபாட்டு தலங்களில் இருந்து அப்படி செல்வதில்லை. முகலாயர்கள் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சி காலம் கடந்து இப்போது வரை இந்து கோயில்களில் உள்ள வருமானங்கள் ஏதோ ஒரு வகையில் சுரண்டப்பட்டு கொண்டிருகின்றன.
பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் இன்றும் இந்து கோயில்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு வரி செலுத்துகின்றன. மற்ற மத வழிபாட்டு தலங்களில் இருந்து அப்படி வரி செலுத்துவது கிடையாது. ஏன் இந்து கோயில்களுக்கு மட்டும் இந்த பாகுபாடு என சிலர் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் கோயில்களுக்கு சொந்தமான விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் கூட அரசின் கஜானாவிற்கு தான் பெரும்பகுதி செல்கிறது. ஆனால் அத்தகைய கோயில் நிலங்களுக்கே பாதுகாப்பு கிடையாது. இன்றைக்கு ஏகப்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக பல்வேறு ஆக்கிரமிப்புகளில் சிக்கி உள்ளது வேதனையான விஷயம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கோயில்களுக்கு மத உணர்வுகள் உள்ளன, கோயிலைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை இருக்கக்கூடாது. எங்கள் அமைப்புக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும் என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தான் ஊழல் நடக்கிறது. அத்தகைய கோயில்களின் செல்வம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி கோயில்களைக் கட்டுப்படுத்த மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். இதுபோன்று பலரும் தங்களது மனக்குமுறல்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். இதனால் #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்டில் உள்ளது.
ALSO READ : Watch Video: Teddy Bear-ல் இறந்த மகனின் இதயத்துடிப்பை கேட்டு அழுத தந்தை..!!!
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...



Comments
Post a Comment