நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உருமாறிய கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து இந்தியா சாதனை

புதுடில்லி: பிரிட்டனில் இருந்து பரவிய புதிய உருமாறிய கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாறி அதிவேகமாக பரவி வருகிறது. இது கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. பிறகு பிரிட்டனில் இருந்து இந்தியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 29 பேர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு குறித்த ஆராய்ச்சி, உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலகில் முதல் முறையாக புதிய வகை கொரோனா வைரசின் மரபணுவை தனியாகப் பிரித்தெடுத்துள்ளது. மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரசின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!