நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நெருக்கடி காலங்களில் உதவும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான புதிய ‘செயலி’ அறிமுகம்

 

நெருக்கடி காலங்களில் உதவும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான புதிய ‘செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

உலகில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ‘குளோபல் பிரவாசி ரிஷ்தா’ என்ற பெயரில் புதிய ‘செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ‘செயலி’யை மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான சேவைகளை அளிக்க தகவல் தொடர்பு தளமாக இந்த ‘செயலி’ இருக்கும். இதன் மூலம் முக்கிய அறிவிப்புகள், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும்.

குறிப்பாக நெருக்கடி காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு உதவும் வகையில் இந்த ‘செயலி’ செயல்படும். வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் http://pravasirishta.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு அவர் வசிக்கும் நாட்டை குறிப்பிட வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை இணைக்க இதுவரை எந்த தளமும் இல்லை. அதற்கான முயற்சியாக இந்த குளோபல் பிரவாசி ரிஷ்தா என்ற ‘செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை, இந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரை இணைக்கும் 3 வழி தொடர்பாக இந்த ‘செயலி’ இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!