நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய்களை குணமாக்கும் பழையசோறு? ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசு

 


சோறு வீணாவதைத் தடுக்க இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் பழைய சோற்றை முன்னிலைபடுத்தி இந்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.    


பகுதிக் குடலிய அழற்சி, அல்சர் போன்ற அழற்சியைக் கொண்ட குடல் நோய்களை குணப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை புதிய ஆய்வுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சோறு வீணாவதைத் தடுக்க இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் பழைய சோற்றை முன்னிலைபடுத்தி இந்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

குடல் நோய்கள் தொடர்பான சிகிச்சைக்கு பழைய சோரின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய 2.7 கோடி ரூபாய் செலவில் 600 மனிதப் பரிசோதனைகளை உள்ளடக்கிய ஒரு ஆராய்ச்சி திட்டத்தை மாநில சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியது.

கிரோன் நோய் ஒரு சுய நோயெதிர்ப்பு நோய் ஆகும், அதாவது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உணவு-குடல் பாதையை தாக்கி, அதில் அழற்சியைத் தோற்றுவிக்கிறது. கிரோன் நோய்க்கு மரபியல் ரீதியான காரணம் இருக்கிறது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் கொண்ட ஒரு நபருக்கு நோய்க்கான ஆபத்து அதிகம். அதிகமாக தொழில்மயமான, மேற்கத்திய நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சுற்றுச்சூழலும் முக்கிய காரணியாக இருக்கக்கூடும் என்று அறிந்து கொள்ளப்பட்டுள்ளது

சென்னையிகுள் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் குடலிய அழற்சி நோய் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த நோயின் பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்துவிட்டது. உதாரணமாக, இந்தியாவில், சராசரியாக 1,00,000 பேரில் 45 பேரிடம் குடல் நோய்கள் காணப்படுகின்றன. இதற்கு, ஸ்டீராய்டு மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், அறுவை சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ALSO READ: 

நிமிடத்துக்கு 4,100 ஆர்டர்கள் குவிந்தன: சொமேட்டோ சி.இ.ஓ. ஆச்சரியம்


இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி துறை,  நோயாளிகளுக்கு அருக்வை சிகிச்சை முறையை பயன்படுத்தாமல் பழைய சோறு உணவையும், சில அடிப்படை மருந்துகளை பரிந்துரைத்திருக்கின்றனர். மேலும், குடல் நோய்களுக்கு  தீர்வு காண்பதில் அதிக முன்னேற்றத்தையும் கண்டுள்ளனர்.

எனவே, பழைய சோறு உணவின் மருத்துவப் பண்புகள் குறித்து விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க, தமிழ்நாடு  மாநில மேம்பாட்டுக் கொள்கைக் கவுன்சிலால் இது தொடர்பான ஆய்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.   ” என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர் நாராயண பாபு கூறினார்.

மனித இரையகக் குடற்பாதையில் இருக்கும் குடல் நுண்ணுயிரிகளில், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் முக்கிய பங்களிக்கும், ஆயிரக் கணக்கான வெவ்வேறு பாக்டீரியாக்களும் இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவு அல்லது மன அழுத்தம் குடலில் உள்ள பாக்டீரியா சமநிலையை பாதிப்பதால், குடல் வீக்கம் ஏற்படுகிறது.

பழைய சோறு உணவில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், குடற்பாதையில் உள்ள பாக்டீரியா ஏற்றத்தாழ்வை சீரமைப்பதோடு, சுய நோயெதிர்ப்பைத் தடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.


ALSO READ : இனிமேல் எல்லா பண்டிகைகளுக்கும் நீங்களே வீட்டில் வெண்ணெய் தயார் செய்வது எளிது!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!