நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

TOI-1231 b : 90 ஒளியாண்டுகள் தொலைவில் மேகம், தண்ணீர், கொண்ட புதிய கோள் கண்டுபிடிப்பு!

 நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கும் 'டிஓஐ 1231 பி' (TOI-1231 b) என்கிற மேகம், தண்ணீர், கொண்ட புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர்.


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் 'டிஓஐ 1231 பி' (TOI-1231 b) என்கிற புதிய கோளை கண்டுபிடித்தது. இந்த கோள் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது. அது நெப்டியூன் கோளின் மறு உருவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளில் பூமியைப் போலவே தண்ணீர் மற்றும் மேகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோள் ‘ரெட் டுவார்ஃப்’ எனப்படும் சிவப்பு குள்ளன் என்கிற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்றும், சூரியனை விட அளவில் சிறியதான இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரத்திற்கு சூரியனைவிட வயது அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரம் இருக்கும் பகுதி குளுமையானது என்பதால், இந்த புதிய கோளும் குளுமை நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த கோளின் தட்பவெட்பம் அறிய பார்கோட் பயன்படுத்தப்படுகிறது. இந்த கோளில் ஹைட்ரஜன் வாயு அணுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலமாகவே இந்த கோளைக் காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘டிஓஐ 1231 பி' கோளில் சராசரியாக 140 டிகிரி பாரன்ஹீட் (60 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும், இது போன்ற அளவிலும், வெப்பநிலையிலும் நமக்குத் தெரிந்த ஒரே ஒரு கோள் இதுதான் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாசா விஞ்ஞானியான டாக்டர் ஜெனிபர் பார்ட் தலைமையில், தென் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்த கோளை ஆய்வு செய்து வருகின்றனர். நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் ‘டிஓஐ 1231 பி’ கோள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அறித்துள்ளனர்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!