நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வேலை தேடுபவரா? Apna மொபைல் செயலி பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

 ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆப்னாவின் செயலியை, இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்னாவை பயன்படுத்தி 15 மில்லியன் வேலைவாய்ப்பு நேர்காணல்கள் நடைபெற்றுள்ளன.


தற்போதைய காலகட்டத்தில் எந்த படிப்பு முடித்திருந்தாலும் வேலை வாய்ப்பு என்பது காணல் நீராகவே இருக்கிறது. அதிலும் கொரோனா பேரிடர் காலத்திலும் ஏற்கனவே லட்சக்கணக்கானவர்கள் தங்களின் வேலைகளை இழந்துவிட்டு குடும்ப செலவுகளை ஈடுகட்ட வருமானமின்றி செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இது போன்ற நிலையில் வேலை தேடுவோருக்கு உதவுகிறது Apna எனும் மொபைல் செயலி.

வேலை தேடுவோரையும், வேலை தருவோரையும் ஒருங்கிணைக்கும் இந்த செயலியில், போஸ்ட் செய்யப்படும் வேலை வாய்ப்பு விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது என்பதால் இதில் மோசடிக்கு வேலையில்லை என கூறுகின்றனர். இந்த இலவச செயலியை வேலை தேடுவோர் பதிவிறக்கம் செய்து சுலபமாக பணி வாய்ப்புகளை பெற முடியும்.

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான நிர்மித் பரிக் என்பவரால் தொடங்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சமீபத்தில் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக திரட்டியுள்ளது. இதன் மூலம் தற்போது பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, சண்டிகர் என 14 நகரங்களில் சேவையளித்து வரும் ஆப்னா செயலி, விரைவில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விஸ்தரிக்கப்படும் என கூறுகிறார்கள்.

ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆப்னாவின் செயலியை, இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்னாவை பயன்படுத்தி 15 மில்லியன் வேலைவாய்ப்பு நேர்காணல்கள் நடைபெற்றுள்ளன.

சேல்ஸ் ஏஜெண்டுகள், பெயிண்டர்கள், கார்பெண்டர்கள் என 70க்கும் மேற்பட்ட பனி வாய்ப்புகள் ஆப்னாவில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல Byju’s, பிளிப்கார்ட், டன்ஸோ, டீம்லீஸ், ஜொமேட்டோ, பர்கர் கிங் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்கள் ஆப்னாவில் இணைந்துள்ளன.

2019ம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் பாட்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆப்புக்கு பெயர் வைத்ததாக கூறும் இதன் நிறுவனர் நிர்மித், பல்வேறு இந்திய மொழிகளில் இந்த ஆப்பினை பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.

வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது ரெஸ்யூம் தயாரிப்பது, வேலை வாய்ப்பு தகுதிகளை மெருகேற்றிக்கொள்வது, துறைசார்ந்த பயிற்சிகள் என உலகத்தர சேவைகளையும் அளிக்க இருப்பதாக கூறும் ஆப்னாவின் நிறுவனர் நிர்மித் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன், சிறுபான்மை ஆணையம், யூனிசெஃப் போன்ற அமைப்புகளுக்கும் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்தார்.



also read :

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!