நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

99 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் போன்ற புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு!

 இந்த புதைப்படிவம் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் இது ஒரு பல்லி என்றால் இப்போது உள்ள இனங்களை அவை ஒத்திருக்கிவில்லை. அது மிகவும் அசாதாரணமானது.


சுமார் 99 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு புதைப்படிவங்கள் மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புகள் மூலம் இது ஒரு புதிய வகை பல்லியினமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

நாகா இன மக்களுக்குப் பிறகு இந்த புதைப்படிவங்கள் ஒகுலுடென்டாவிஸ் நாகா (ஓ. நாகா) என்று பெயரிடப்பட்ட புதிய இனங்கள் ஆகும். இவை ஒகுலுடென்டாவிஸ் கவுங்ரே போன்ற இனத்தைச் சேர்ந்தவை. அதாவது முன்னர் அறியப்பட்ட மிகச்சிறிய பறவை அல்லது டைனோசர் என்று கருதப்படும் ஒரு இனம் ஆகும்.

இந்த இரண்டு புதிய மாதிரிகளில், தாடை எலும்புகளுடன் இணைக்கப்பட்ட பற்கள் மற்றும் அம்பரில் பாதுகாக்கப்பட்ட மென்மையான திசுக்கள் மூலம் இதன் முக்கிய உடல் பண்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதன் உதவியோடு அவை புதிய வகை பல்லி இனமாக இருக்கலாம் என்று அடையாளம் கண்டனர். இதுகுறித்து, ஸ்பெயினின் இன்ஸ்டிட்யூட் கேடலே டி பேலியோண்டோலோஜியா மைக்கேல் க்ரூசாஃபோன்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளர் அர்னாவ் போலட் கூறியதாவது, "இந்த புதைப்படிவம் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் இது ஒரு பல்லி என்றால் இப்போது உள்ள இனங்களை அவை ஒத்திருக்கிவில்லை. அது மிகவும் அசாதாரணமானது" என்று கூறினார்.

இந்த பாலியான்டாலஜிஸ்டுகளை சி.டி ஸ்கேன் செய்து தரவுகளை ஆராய்ந்த பின்னர், மர்ம விலங்கு செதில்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். பற்கள் நேரடியாக தாடை எலும்புடன் இணைக்கப்பட்டிருந்தன. பொதுவாக டைனோசர்களின் பற்கள் ஒரு சாக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். தாடை எலும்புடன் அல்ல. எனவே இந்த புதைப்படிவங்கள் டைனோசர் இனத்தை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை. மேலும் இதன் கண் அமைப்பு மற்றும் பல்லிகளைப் போன்ற தோள்பட்டை எலும்புகள் மற்றும் ஹாக்கி குச்சி வடிவ மண்டை எலும்பு ஆகியவை தாடை எலும்புடன் இணைக்கப்பட்ட பற்களைக் கொண்ட ஊர்வன இனத்தோடு ஒத்துப்போவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

இது குறித்து போலெட் மேலும் கூறியதாவது, " கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு மாதிரிகளும் ஒக்குலுடென்டாவிஸைச் சேர்ந்தவை என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் அவற்றில் உள்ள பல வேறுபாடுகள் அவை தனி இனங்களைக் குறிக்கின்றன" என்று தெரிவித்தார். இந்த சமீபத்திய ஆராய்ச்சி Current Biology இதழில் ஜூன் 14ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதேபோல மார்ச் 2020 இல் நேச்சரில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், விஞ்ஞானிகள் ஓ. கவுங்ரேவை ஹம்மிங் பறவை அளவிலான டைனோசர்களாக அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் 2020 மே மாதத்தில் அந்த ஆராய்ச்சி தொடர்பான அறிக்கையை திரும்பப் பெற்றன.

இரண்டு மாதிரிகளை பாதுகாப்பாக எடுத்து வைக்கும் போது அவை சிதைய ஆரம்பித்தது என்பதையும் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது. மியான்மரில் ரத்தினவியலாளர் அடோல்ஃப் பெரெட்டியால் வாங்கப்பட்ட இந்த புதைபடிவ சேகரிப்பைப் பற்றி படிக்கும் போது இந்த மாதிரியை முதன்முதலில் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கவனித்தது தெரியவந்தது. மியான்மரில் அம்பர் சுரங்கமும் விற்பனையும் நாட்டில் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டுள்ளதால், சொசைட்டி ஃபார் வெர்டிபாரெட் பாலியான்டாலஜி அமைத்த நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த புதைப்படிவம் விற்கப்பட்டது என்று புளோரிடா இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் செய்தி வெளியிட்டது.


ALSO READ :

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!