நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் இதை குறைத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 என்னும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பதை உலகமும், இந்திய குடிமக்களும் உணர்ந்து உள்ளனர்.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் உணர்ந்து உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து கொழுப்பு உணவுகளை தவிர்த்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்று ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் மற்றும் இயக்குனர் டாக்டர் பிரவீன்ராஜ் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 என்னும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பதை உலகமும், இந்திய குடிமக்களும் உணர்ந்து உள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, உடற்பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்கிறார். அனைத்து டாக்டர்களும், உடல் நல நிபுணர்களும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் தான் நோய்களுக்கு எதிராக போராட முக்கியமானது என கூறுகின்றனர். அதேசமயம் உடல் பருமன், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைந்து விடுகிறது.

உடல் பருமன் உள்ளவர்களை தசை எலும்பு மற்றும் கொழுப்பு கொண்டவர்கள் என வகைப்படுத்தலாம். உதாரணமாக 100 கிலோ அளவுக்கு அதிகமான எடையுள்ள ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் குறைந்த கொழுப்புடன் வலிமையாக இருந்தால் அவர் நல்ல ஆரோக்கியமானவர் தான். அதேசமயம் ஒல்லியாக இருப்பர் அதிக கொழுப்புடன் இருந்தால் அவர் ஆரோக்கியமானவர் அல்ல. ஒருவர் தனது கொழுப்பு அளவை அறிந்து அதை குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவை கட்டுப்படுத்த கூடாது.

இந்த தொற்று காலம் நாம் நல்ல நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கிறோமா, நோயை எதிர்த்து போராட முடியுமா என்பதை உணர்த்தியுள்ளது.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி, நடைபயிற்சி, மூச்சு பயிற்சி, நீச்சல் போன்றவைகளை மேற்கொள்ளலாம். இவை உடலில் உள்ள கொழுப்பு சத்தை எரிக்கும் என்பதே எனது மாபெரும் அறிவுரை. உடற்பயிற்சிக்கு பதிலாக உணவை கட்டுப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!