நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குவைத்தில் குவிந்து கிடக்கும் கோடிக்கணக்கான சக்கரங்கள்

 குவைத்தில் கோடிக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பயன்படாத வாகன சக்கரங்களை மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியுள்ளது.


கிட்டதட்ட 4 கோடி சக்கரங்கள் இங்கு குவிக்கப்பட்டுள்ளதோடு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாவதாக மக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த சக்கரங்களை மறு சுழற்சி செய்து டைல்ஸ் உள்ளிட்ட பொருட்களை உருவாக்குவதாக கூறியுள்ளது. எனவே இந்த சக்கரங்களை இங்கிருந்து அகற்றி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பேருதவியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.



ALSO READ : மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது?

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!