நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்க உதடு ரொம்ப கருமையாக இருக்கா? இதனை போக்க இதோ சில எளிய வழிகள்!

பொதுவாக முகத்தின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் உதட்டை பராமரிப்பது அவசியம்.சிலருக்கு முகம் மிகவும் பளிச்சென இருக்கும், ஆனால் உதட்டில் வெடிப்பு அல்லது கருப்பு படிந்திருக்கும்.

சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து வரும் பாதிப்பு எல்லாமே உதடுகளில் பாதிப்பை உண்டாக்கிவிடும். இதனால் உதடு கருப்பு நிறமாக மாறலாம்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்ய முடியும். அதற்கு பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளியமுறையில் நீக்க முடியும்.   

அந்தவகையில் தற்போது உதடு கருமையை நீக்க கூடிய ஒரு சில இயற்கை வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.
உதடுகளில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தினமும் உதட்டில் தேன் தடவிவரலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். உதடும் மிருதுவாகி விடும்.

எலுமிச்சை சாறையும் உதடுகளில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். அது உதட்டு கருமையை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சை சாறை இரவில் சிறிது நேரம் உதட்டில் தடவி மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விட வேண்டும்.

பீட்ரூட்டை சாறு எடுத்தும் உதட்டில் தடவி வரலாம். அடிக்கடி அதனை தடவி வந்தால் கருமை நிறம் மறையத்தொடங்கிவிடும்.

ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்தலாம். உதடு வறட்சி, உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைக்கு ஐஸ்கட்டிகள் நிவாரணம் தரும். அவை உதட்டில் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடு பொலிவுக்கு வித்திடும்.

ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி பழங்களை மசித்து அதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜூஸ் சேர்த்து உதட்டில் தடவிவிட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஆலிவ் ஆயிலும் உதட்டு பொலிவுக்கு உதவும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!