நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்களுக்கு நீண்ட நாளாக வறட்டு இருமல் இருக்கா? இதனை போக்க இதோ சில ஆயுர்வேத வைத்தியம்

 பொதுவா குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வறட்டு இருமல் பகலை காட்டிலும் இரவு நேரங்களில் கூடுதலாக இருக்கும் இவை வைரஸ் தொற்றாலும் உருவாகலாம்.

வறட்டு இருமல் காரணமாகவும் தொண்டையில் எரிச்சல் உண்டாகலாம். இவை சளியால் உண்டாவதில்லை என்பதால் வழக்கமான இருமலை காட்டிலும் அதிக நாள் இவை நீடிக்க கூடும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்க வேண்டும். அதற்கு ஒரு சில ஆயுர்வேத வைத்தியங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.



  • வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் சேர்த்து தேன் கலக்கவும். இதை இளஞ்சூட்டில் பருகவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வரவும். நிவாரணம் கிடைக்கும் வரை இதை குடித்து வரலாம்.

  • சுக்கு பொடி1 டீஸ்பூன் எடுக்கவும். இதனுடன் மிளகுத்தூள் 1 டீஸ்பூன் கலந்து இரண்டையும் தேனில் கலந்து குழைத்து எடுக்கவும். இதை தினசரி மூன்று வேளை உணவில் ஒவ்வொரு உணவுக்கு பிறகும் 1 டீஸ்பூன் அளவு சாப்பிடவும். இது வறட்டு இருமலுடன் சளி மற்றும் இருமலையும் குணப்படுத்த செய்யும்.

  • பாலை காய்ச்சி 1 டீஸ்பூன் சுக்கு பொடி கலக்கவும். இதில் அரை டீஸ்பூன் தனியா தூள், மிளகுத்தூள் அரை டீஸ்பூன் கலந்து விடவும். பாலை நன்றாக கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது குடிக்கவும். தினமும் இரண்டு வேளை இந்த பாலை குடித்து வந்தால் வறட்டு இருமல் படிப்படியாக கட்டுக்குள் வரலாம்.

  • கற்பூரவல்லி இலையை இடித்து சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து சாப்பிடவும். தினமும் மூன்று வேளை இதை சாப்பிட்டு வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். பெரியவர்கள் கற்பூரவல்லி இலையை தேனில் நனைத்தும் சாப்பிடலாம்.  

  • இலவங்கப்பட்டையை பொடித்து வைக்கவும். இலவங்கப்பட்டையை 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்க்கவும். இரண்டையும் நெய் கலந்து குழைக்கவும். இதை நாள் ஒன்றுக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.   

  • பூண்டை தோல் உரித்து நசுக்கி விடவும். நீரை கொதிக்க வைத்து அதில் பூண்டு சேர்க்கவும். இதை இறக்கி ஆறவைத்து தேன் சேர்த்து குடிக்கவும். தினமும் மூன்று முறை இதை குடித்து வந்தால் வறட்டு இருமல் சரியாகும்.

  • வறட்டு இருமல் இருக்கும் போது துளசி இலைச்சாற்றில் சிட்டிகை மஞ்சள், சில துளி எலுமிச்சை சாறு கலந்து தேன் சேர்த்து குடிக்கவும். சிறு குழந்தைகளுக்கு துளசியை நுகர பழகினாலும் போதும் இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவும்.

  • வறட்டு இருமல் கொண்டிருக்கும் போது ஓமம் விதைகளை பொடித்து வெல்லம் கலந்து சாப்பிடலாம். தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் விரைவில் குணமாகும்.   



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!