நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோபல் பரிசும்... பெண் சாதனையாளர்களும்...

 இந்தியாவில் தொண்டு செய்த அன்னை தெரசா உட்பட, இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு 134 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பெண்கள்.


சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆல்பிரட் நோபல், 1895-ம் ஆண்டு எழுதிய உயிலின்படி, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கும், உலக அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களை, நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நார்வேஜியன் நோபல் கமிட்டியும், மற்ற துறைகளில் பரிசு பெறுபவர்களை சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசு குழுவும் தேர்வு செய்கிறார்கள்.

1901-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தம் 962 பேர் நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர். அவர்களில் 58 பேர் பெண்கள். அதாவது, கடந்த 119 ஆண்டுகளில் 6.05 சதவிகித பெண்கள் இப்பரிசை பெற்றுள்ளனர்.

இந்தியாவில் தொண்டு செய்த அன்னை தெரசா உட்பட, இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு 134 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பெண்கள்.

அமைதிக்கான பரிசுக்கு அடுத்து, இலக்கிய துறையில்தான் பெண்கள் அதிக நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். இலக்கியத்துக்காக இதுவரை 117 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 16 பரிசை பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.

இலக்கியத்துக்கு அடுத்தபடியாக பெண்கள் மருத்துவத்துறையில் பரிசுகளை பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 222 பேர் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ள நிலையில், அவர்களில் பெண்கள் 12 பேர்.
1903-ல் நோபல் பரிசுபெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் மேரி கியூரி. இவர் ரேடியம் எனும் தனிமத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து, ஆராய்ந்ததற்காக 1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். அவர் பரிசு பெற்று 24 ஆண்டுகள் கழித்து, அவரது மகள் ஐரின் கியூரி 1935-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். வேதியியல் துறையில் இதுவரை 186 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 7 பேர் பெண்கள் ஆவர்.

இயற்பியல் துறையில் 216 பேருக்கு இதுவரை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் பெண்கள். 2020-ம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை பெற்றவரில் ஆண்ட்ரியா கெஸ் என்ற பெண்ணும் ஒருவர்.

இதுவரை அளிக்கப்பட்ட நோபல் பரிசுகளில் 2009-ம் ஆண்டு 5 பெண்களுக்கும், 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் 4 பெண்களுக்கும் அளிக்கப்பட்டதே ஒரு 
ஆண்டுக்கான அதிகபட்ச அளவாகும். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!