நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மனித உடல்களை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கில்லர்! நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்.......

 அமெரிக்காவில் சைக்கோ கில்லர் ஒருவர் மனிதர்களை கொலை செய்து உடல் பாகங்களை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


மெரிக்காவின் Idaho மாகாணத்தில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி ஒன்றில் முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தலைகீழாக தொங்கியவாறு கிடந்துள்ளார்.

இதை பார்த்த பொது மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் இறந்த முதியவரின் பெயர் David என்பது தெரியவந்தது. இவரை கொலை செய்தது James David என்று தெரியவந்ததையடுத்து பொலீஸ் அவர் வசிக்கும் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் .

அப்போது அவரது வீட்டின் மைக்ரோவேவ் ஓவன் முழுவதும் ரத்தக்கரையாக இருந்தது. வீட்டு கிச்சனின் கல்லீரல், நுரையீரல், மனித ரத்தம் என வீடே ரத்தக்களறியாக காட்சி அளித்துள்ளது. மனித பாகங்களை சாப்பிட்டால் தன்னுடைய மூளை அதீத சுறுசுறுப்பாக இருக்கும்.

இதனால் முதியவரை கொலை செய்து அவற்றின் மூளையை சாப்பிட்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிஸ் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜேம்ஸ் மனநலம் குறித்து மருத்துவ ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 



ALSO READ : உடலின் அந்தரங்க உறுப்பில் 278 துளை! இது படுக்கையறை மகிழ்ச்சி ரகசியம்.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!