நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2021ல் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி, சமோசா

இந்தியாவில் 2021ல் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சிக்கன் பிரியாணி, சமோசா என ஸ்விக்கி கூறி உள்ளது.
ஆண்டுதோறும் ஆர்டர்களின் அடிப்படையில் ஸ்விக்கி நிறுவனம் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவு வகைகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு 500 நகரங்களில் பெறப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 115 முறை ஆர்டர் செய்யும் அளவிற்கு முதல் இடத்தில் சிக்கன் பிரியாணி உள்ளது. 2021 ஆம் ஆண்டிலும் சிக்கன் பிரியாணி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஆட்சி செய்து வருகிறது.4.25 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனர்கள் ஆர்டர் செய்துள்ளனர்.

இது சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஐதராபாத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது. ஆனால் மும்பையில் பருப்பு கிச்சிடி அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.இங்கு உண்மையில், பிரியாணியை விட சிக்கன் பிரைடு ரைஸ், மசாலா தோசை மற்றும் பூண்டு ரொட்டிகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன.

குருகிராமில் பிரியாணியை விட தால் மக்கானி மற்றும் மசாலா தோசை ஆகியவை டாப் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களில் உள்ளன.

மசாலா தோசையை விரும்பும் மற்றொரு வட இந்திய நகரம் லக்னோ ஆகும். கொல்கத்தாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் மட்டன் பிரியாணி மற்றும் வேகவைத்த மோமோஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

50 லட்சம் ஆர்டர்களுடன் சமோசாக்கள் அதிகம் சாப்பிடும் சிற்றுண்டியாக உள்ளது. 21 லட்சம் ஆர்டர்களுடன் இந்தியாவின் இரண்டாவது விருப்பமான சிற்றுண்டியாக பாவ்-பாஜி உள்ளது. அடுத்து குலாப் ஜாமூன் உள்ளது.

சைவ உணவு ஆர்டர்களில் 83 சதவீதம் அதிகரித்து உள்ளது.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!