நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உயிரை துச்சமாக எண்ணிய ஆட்டோ டிரைவர்... பைக் ஓட்டி வந்தவரை இடித்து கீழே தள்ளி விட்டு தப்பி ஓட்டம் (வீடியோ)

 

இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வேண்டுமென்றே ஆட்டோவை வைத்து இடித்து கீழே தள்ளிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


மும்பையில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மும்பையை சேர்ந்தவர் கிஷோர் கர்தாக். இவர் மும்பையின் புறநகர் கோவண்டி பகுதியில் ஒரு பரபரப்பான சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருக்கையில் குறுகலான பகுதியில் ஆட்டோ ஒன்று கிஷோர் கர்தாக்கை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

ALSO READ: ஜப்பான் ஏன் மரத்தில் Satellite உருவாக்குகிறது தெரியுமா?

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சல்மான் சயீத் (வயது 34) எனும் ஆட்டோ டிரைவர் கிஷோர் கர்தாக்கிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் கிஷோர் கர்தாக் தனது பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். ஆட்டோவும் பைக்கும் ஒரே சாலையில் சென்று கொண்டிருக்க ஆட்டோ டிரைவர் கிஷோர் கர்தாக் மீது இருந்த ஆத்திரத்தில் தனது ஆட்டோவை வைத்து வேகமாக மோதிவிட்டு தப்பிச் சென்று விட்டார்.
நிலை தடுமாறி கீழே விழுந்த கிஷோர் கர்தாக் லேசான காயத்துடன் உயிர்தப்பியுள்ளார். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் ஆட்டோ எண்ணை கண்டுபிடித்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

VIDEO LINK:



பின்னர் ஆட்டோ டிரைவர் சல்மான் சயீத் குற்றம் சாட்டப்பட்ட ஐபிசியின் 307 (கொலை முயற்சி) மற்றும் 279 (அலட்சியம் வாகனம் ஓட்டுதல்) பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க அச்சமாக உள்ளதாகவும், இது போன்ற ஆட்டோ டிரைவர்களுக்கு கடுமையான நடவடிக்கை வேண்டும் எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!