நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தென் கொரியாவில் வண்ண மீன்களை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்” தண்ணீருக்குள் இருந்தபடி பார்வையாளர்களை வரவேற்கும் நீச்சல் வீரர்கள்..!


தென் கொரிய தலைநகர் சியோலில், மீன் அருங்காட்சியகத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளை, பாரம்பரிய உடையணிந்த நீச்சல் வீரர்கள் தண்ணீருக்குள் இருந்தபடி வரவேற்றனர்.

தென் கொரியாவின் மிகப்பெரிய மீன் அருங்காட்சியகமான Lotte World Aquarium-இல், சிறிய மீன்கள் முதல் சுறா மீன்கள் வரை, 650 வகை கடல் வாழ் உயிரிணங்கள் வளர்க்கப்படுகின்றன.

2,200 டன் எடையிலான இந்த அருங்காட்சியகத்தில், மீன்களுக்கு மத்தியில் பாரம்பரியமிக்க Hanbok உடையில் வலம் வந்த நீச்சல் வீரர்களை சிறுவர்கள் உற்சாகத்துடன் ரசித்தனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!