நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த கேட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது… நானும் வரமாட்டேன் - நகைப்பை ஏற்படுத்திய நாய்கள்.

தாய்லாந்தில் சிறிய கேட்டை மூடினால் சண்டையிடும் நாய்கள் கேட்டை திறந்ததும் நட்பு பாராட்டு நகைப்பை ஏற்படுத்திய நாய்கள். 

கிழக்குப் பகுதியில் உள்ள ரயோங் என்ற இடத்தில் வீட்டில் வளர்க்கப்படும் நாயும், தெருவில் சுற்றித்திரியும் நாயும் சிறிய கேட்டுக்கு இருபுறமும் நின்று கொள்கின்றன.

கேட்டை மூடினால் சண்டையிட்டுக் கொள்ளும் நாய்கள், திறந்த மறுநொடியே அமைதி காக்கின்றன.

இந்த கேட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது.... நானும் வரமாட்டேன் என்பது போல நாய்கள் பாவலா காட்டும் வீடியோ நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!