நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கடலுக்கடியில் எரிபொருள் குழாயை ஆய்வு செய்ய பாம்பு வடிவ ரோபோக்களை பயன்படுத்தும் நார்வே..!

நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாயைக் கண்காணிக்க பாம்பு வடிவ ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுமார் 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரோபோக்கள் முன்பகுதியில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் அரை கிலோ மீட்டர் ஆழத்தில் சுமார் 6 மாதங்கள் வரை தொடர்ந்து பணியாற்றும் திறன் கொண்ட இந்த ரோபோக்கள் எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவுகளை அடைத்தல், வால்வுகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

தானாக இயங்கக் கூடிய பாம்பு ரோபோக்கள் சார்ஜ் குறைந்ததும் தானாகவே கடலுக்கு மேற்புரம் வந்து அருகில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ரீ சார்ஜ் செய்து கொள்ளும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!