நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டிஜிட்டல் அசூரனா சீனா? அமெரிக்க புகாரால் அதிர்ச்சி.!


ஆழ்கடலுக்குள் பதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களை புதிய ஆயுதமாகப் பயன்படுத்தி, உலகளாவிய, இண்டர்நெட், தகவல்தொடர்பு உள்ளிட்ட சைபர் தொழில்நுட்பங்களை, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா முயற்சிப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது. 

சீனாவின் பிரபல தகவல் தொடர்பு மற்றும் டெலிகாம் உற்பத்தி பொருள் நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், மீது, 2019ஆம் ஆண்டு பின்னிறுதியில், தகவல் திருட்டு குற்றச்சாட்டை, அமெரிக்கா சுமத்தியது. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு, மற்ற நாடுகளை உளவு பார்க்கவும், தேசப் பாதுகாப்பு தகவல்களை திரட்டவும், உதவிட, ஹூவாய் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக, குற்றம்சாட்டப்பட்டது.

டெலிகாம் சேவை மற்றும் டிஜிட்டல் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சீன நிறுவனமான ZTE உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உலக சைபர் பாதுகாப்பு நுட்பங்களை கட்டுப்படுத்தி, ஏதேச்சதிகாரமாக செயல்பட ஹூவாய், ZTE உள்ளிட்ட தனது நிறுவனங்கள் மூலம் சீனா முனைவதாகவும், அமெரிக்கா பகீர் புகாரை தொடுத்துள்ளது.

அதிஉயர் இணைய இணைப்பை சாத்தியமாக்கும், 5ஜி சேவையை வழங்குவதிலும், அமெரிக்கா மற்றும் சீன நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இந்த குற்றச்சாட்டு வீசப்பட்டிருக்கிறது.

சீனாவின் ZTE 5ஜி சேவையை வழங்க, பெரும் முஸ்தீபுகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், ஹூவாய்யை தொடர்ந்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டு ZTE நிறுவனம் ஆளாகியிருக்கிறது.

இந்த ஒரு நிறுவனம் மட்டுமின்றி, இதுபோன்ற, சீன தகவல் தொடர்பு நிறுவனங்களால், ஒவ்வொரு நாட்டின், சைபர் பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.

இந்தியப்பெருங்கடல், அட்லாண்டிக், பசிபிக் உள்ளிட்ட ஆழ்கடல் பிராந்தியங்களில், அதிவிரைவு தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தித்தர வல்ல, 380 ஆழ்கடல் கேபிள் திட்டங்களில், சீனாவின் ஹூவாய், ZTE உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த ஆழ்கடல் கேபிள்கள் மூலம், உலகில் 95 சதவிகித தகவல் தொடர்பு டேட்டாக்கள் பகிரப்படுவதாக சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, ஹூவாய் நிறுவன ஆழ்கடல் கேபிள் திட்டங்களிலிருந்து அமெரிக்கா தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதோடு, உடனடியாக வெளியேற ஆணை பிறப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, சீனாவின் ஆழ்கடல் கேபிள் திட்டங்களுக்கு எதிராக, அந்நாட்டின் பரம வைரியான ஜப்பான் களமிறங்கியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!