நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

“வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிட்டு சிக்னல்-க்கு மாறும் நேரம்இது” : பேடிஎம்

 “வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிட்டு சிக்னலுக்கு மாறவேண்டிய நேரம் இது” என்று பேடிஎம்(Paytm) சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.


வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர உள்ளது. விவரங்களை கொடுக்காத பயனர்களின் செயல்பாடு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிட்டு சிக்னலுக்கு மாறவேண்டிய நேரம் இது தான் என ட்வீட் செய்துள்ளார் Paytm நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா.


“அவர்கள் சொல்கிறார்கள் மார்கெட்டிற்கு பவர் உள்ளது என்று. நாம் தான் உலகின் மிகப்பெரிய மார்க்கெட். இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் அவர்களது ஏகபோக தனியுரிமையை பயன்படுத்தி மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை எடுத்து கொள்ளும் துஷ்பிரயோகம் செய்கின்றனர். நாம் இப்போதே சிக்னலுக்கு மாறியாக வேண்டும். இந்த மாதிரியான நகர்வுகளுக்கு மறுப்பு சொல்வதும், அதற்கு பலிகடா ஆவதும் நம் கைகளில் தான் உள்ளன” என அவர் சொல்லியுள்ளார். 

முன்னதாக உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்கும் சிக்னல் அப்ளிகேஷனை பயன்படுத்துமாறு ட்வீட் செய்திருந்தார். உலகம் முழுவதும் பலரும் இப்போது சிக்னல் அப்ளிகேஷனை அவரவர் செல்போன்களில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர். 


ALSO READ : Google map க்கு போட்டியாக intents GO – சாலையில் உள்ள குழிகளை கூட சொல்கிறது!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!