நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Corona காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாத்தித்த இந்தியர் யார்?

 கொரோனா வைரஸ் பரவி, ஏற்படுத்திய தாக்கங்களால் பொருளாதாரமே முடங்கியபோதும், இவர் ஒரு நொடியில் சம்பாதித்ததை ஒரு சாதாரண தொழிலாளி சம்பாதிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும்.


தொற்றுநோய் காலத்தில் பலர் வேலைவாய்ப்பையும், வருமானத்தை இழந்து வாடியபோது, ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்த ஒரே இந்தியர் யார் என்பது தெரிந்தால், ஆச்சரியம் ஏற்படும்…

வருமான சமத்துவமின்மை குறித்து சமீபத்தில் ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய்களின் போது ஒரு நொடியில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி சம்பாதித்த தொகையை சாதாரண தொழிலாளி ஒருவர் சம்பாதிக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று சுட்டிக்காட்டியது.

‘Inequality Virus’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆக்ஸ்பாம் (Oxfam) பல கேள்விகளை எழுப்புகிறது. 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி, ஏற்படுத்திய தாக்கங்களால் உலகமே நொந்து நூலான சமயத்தில் RIL முதலாளி அம்பானி, ஒரு நொடியில் சம்பாதித்த  தொகையை ஒரு சாதாரண தொழிலாளி சம்பாதிக்க, அவருக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும். ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அம்பானி ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஒரு மணி நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited (RIL)) தலைவர் முகேஷ் அம்பானி சம்பாதித்த பணத்தை ஈட்ட, ஒரு தொழிலாளிக்கு 10,000 ஆண்டுகள் ஆகலாம் என்று சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கை சொல்வதைக் கேட்டால் மலைப்பாக இருக்கிறது.  

ஒரு கணிப்பின்படி, இந்தியாவில் (India) சுமார் 24 சதவீதம் பேர் கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய் பரவல் காலத்தில் மாதத்திற்கு 3,000 ரூபாய் என்ற அளவில் தான் வருமானம் ஈட்ட முடிகிறது. 40 கோடி முறைசாரா தொழிலாளர்களின் வறுமையை குறைந்தது ஐந்து மாதங்களாவது போக்க அம்பானியின் செல்வம் மட்டும் போதுமானதாக இருக்கும் என்றும் ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆக்ஸ்பாமின் சமீபத்திய அறிக்கை, கோவிட் -19 தொற்றுநோய் எவ்வாறு பணக்காரர்களுக்கும் ஏழ்மையான மக்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளது.


also read :   ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!