நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்காவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி: 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவில் நோவாவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி மிதமான, கடுமையான கொரோனா நோய்க்கு எதிராக 100 சதவீதம் பாதுகாப்பானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அவசர கால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 சதவீதம் பாதுகாக்கும் என்றும், 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என்றும், உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசிக்கான தேவை பலமடங்கு குறைந்துள்ளது. ஆனால் பல நாடுகளில் அதற்கு கிராக்கி உள்ளது. எனவே, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தவுடன்,வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம் எனவும் நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

2021-ம் ஆண்டின் மூன்றாலம் காலாண்டில் அனுமதி பெற்று விடுவோம் என்றும், காலாண்டு இறுதியில் மாதத்திற்கு 10 கோடி டோஸ்களும், ஆண்டு இறுதி காலண்டிற்குள் மாதத்திற்கு 15 கோடி டோஸ்கள் தயாரிக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நோவாவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை பெறும் எனத் தெரிகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!