நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதை காட்டும் இந்த அறிகுறிகளை உணர்ந்தால் கவனமாக இருங்கள்..!

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை அலார்ட் செய்யும் உடல் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்.


வயிற்று கோளாறுகள் : 

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வயிற்றுக் குடல்களுக்குத்தான் 70% பங்கு உள்ளது. அதாவது குடல் பாக்டீரியாக்கள்தான் நோய் உண்டாக்கும் தொற்றுகளோடு எதிர்த்துப் போராடுகின்றன. அதோடு குடல்கள் உருவாக்கும் T- செல்கள்தான் இந்த குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டுகின்றன. இந்த குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறையும்போதுதான் வைரஸ்களின் தாக்கம் அதிகரிக்கிறது. அதன் அறிகுறிகளை நமக்கு உணர்த்தும் விதமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு , வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக் கூடும். எனவே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளில் கவனம் செலுத்துங்கள்.

காயங்கள் ஆறுவதற்கு தாமதம் : 

காயங்களை குணமாக்கும் அழற்சிதான் தொற்றுகளை தடுக்கின்றன. அவை காயம் ஏற்பட்ட இடத்தில் புதிய செல்களை உருவாக்கி காயத்தின் வீரியத்தை குறைக்கின்றன. அதன் தடத்தை சரி செய்கின்றன. அந்த வகையில் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் புதிய செல்களின் உருவாக்கம் தாமதமாகும். அதோடு காயத்தின் வீரியமும் அதிகரிக்கலாம். காயங்களை ஆற்றுவதற்கு அதாவது புதிய செல்களின் உருவாக்கத்திற்கு விட்டமின் டி, சி மற்றும் சிங்க் சத்துக்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக கொலாஜின் அடுக்கு உருவாக விட்டமின் சி அவசியம். எனவே இந்த சத்துக்களை அதிகம் உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். இவை காயங்களுக்கு மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு அழற்சியையும் அதிகரிக்கும் என்பதை மறவாதீர்கள்.

சோர்வு மற்றும் நாட்டமின்மை : 

என்னதான் நன்கு தூங்கி எழுந்தாலும் ஒருவித சோர்வு எப்போதும் இருக்கும். ஆற்றல் அளவு குறையும். நோய் எதிர்ப்பு சக்தியானது உடலின் ஆற்றலோடு நேரடித் தொடர்பில் இருக்கக் கூடியது. நோய் தாக்கத்தின் போராட்டத்தின்போது நோய் எதிர்ப்பு சக்தியின் எரிபொருளே ஆற்றல்தான். எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே இருப்பதன் மற்றுமொரு அறிகுறி உடல் சோர்வு. எனவே உடலை எப்போதும் சுருசுருப்பாக வைத்திருக்க யோகா, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அடிக்கடி சளி பிடித்தல் : 

ஆய்வின் படி பெரியவர்களுக்கு ஆண்டுக்கு 2 அல்லது 3 முறைதான் சளி பிடிக்க வேண்டுமாம். ஆனால் சிலர் அடிக்கடி சளியால் அவஸ்தைப்படுகிறார்கள் எனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சுகாதாரத்தை பொருத்து உண்டாகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள். உங்களுக்கு இது ஆரோக்கியமில்லை என மனதில் படுவதை அப்போதே தவிர்த்துவிடுங்கள்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் : 

நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது உங்கள் உடல் கார்டிகோஸ்டீராய்டுகளை வெளியிடுகிறது. இது நம் உடலில் உள்ள லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறனை அடக்குகிறது. மன அழுத்தத்தின்போது சிலர் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றனர். அதாவது மது, சிகரெட் போன்ற பழக்கங்கள்நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பலவீனமாக்கும். எனவே இதுபோன்ற தருணங்களின் மன அழுத்தங்களிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளை கண்டறியுங்கள். உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். ஆரோக்கியமான உணவு, யோகா, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!