நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆன்லைன் மோசடி: பொதுமக்கள் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

சமூகவலைதளங்கள் வாயிலாக மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களுக்கு பண ஆசை காட்டி விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.
ஆன்லைன் முதலீடு செயலி மூலம் மோசடி நடப்பதால், பொதுமக்கள் அதில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்றிரவு அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:-


சமூகவலைதளங்கள் வாயிலாக மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களுக்கு பண ஆசை காட்டி விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். குறைந்த முதலீடு, அதிக லாபம் என்று ஆசையை தூண்டுகிறார்கள். அந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வெளியிடாமல், ஆன்லைன் செயலி மூலம் பணம் கட்டச்சொல்வார்கள்.

பெரிய அளவில் பணம் கட்டச்சொல்லி பின்னர் ஏமாற்றி விடுவார்கள். இவ்வாறு பணத்தை கட்டி ஏமாந்த 34 பேர் புகார் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.

இது போன்ற ஆன்லைன் முதலீடு செயலியை நம்பி பொதுமக்கள் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை எனது வேண்டுகோளாகவும் வைக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!