நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்

 வைரல் வீடியோ:  இதுபோன்ற செயல்கள் மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். 


இமாச்சல பிரதேசம், ஜம்மு -காஷ்மீர், லடாக், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பி செய்த கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு என மிகவும் பாதிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்னர் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கிடையில், இதுபோன்ற பல வீடியோக்களும் முன்னுக்கு வந்தன. அந்த வீடியோவை பார்க்கும் போது மக்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருந்துள்ளனர் என்பது தெரியும். இதுபோன்ற செயல்கள் மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். 

இதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கனமழைக் காரணமாக சாலையில் வெள்ளம் போல நீர் பெருமளவில் வேகமாக செல்கிறது. அப்படி இருக்கையில், ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து அதை கடக்க முயல்கிறார்.

சுமார் 20 வினாடிகள் வைரலாகும் வீடியோவில், பிரதான சாலை முழுவதும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. அப்போது மிதிவண்டியில் வரும் ஒரு நபர் அதிக வேகத்தில், அதனைக் கடக்க முயல்கிறார். 

watch video

ஆனால் வெள்ள நீரின் வேகம் அதிமாக இருந்ததால், அவர் சமநிலை இழந்து, நீரின் சுழற்சி காரணமாக நீரின் திசையில் அவரை இழுக்கத் தொடங்கியது. கீழே விழுகிறார். சைக்கிளும் கையை விட்டு செல்கிறது. 

சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு எப்படியோ தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கரையை நோக்கி வருகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஃபன்னி வீடியோவின் கைப்பிடியில் பதிவேற்றப்பட்டு உள்ளது.


ALSO READ : இவை பறக்கும் பறவைகள் மட்டுமல்ல, பணக்கார கோடீஸ்வர புறாக்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!